பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குருத்து ஈ: அதெரிகோனா அப்ராக்சிமேட்ட

சேதத்தின் அறிகுறிகள்:

  • இளம் பயிர்களின் நடுக்குருத்து காய்ந்துவிடும்
  • கதிரின் நுனிப்பகுதியில் பதராகிவிடும்.  கதிரின் கீழ்ப்பகுதியில் நன்கு வளர்ந்த தானியங்கள் காணப்படும்

சேதத்தின் அறிகுறிகள்:

  • பூச்சி: ஈ: பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WS என்ற வீதம் விதை நேர்த்தி செய்து விதைகளை விதைக்க வேண்டும்
  • அறுவடைக்குப் பிறகு நிலத்தை உழவு செய்து கம்புத் தட்டைகளை அகற்ற வேண்டும்.
  • குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறியினை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்.
    • மெத்தில் டெமட்டான் 25 EC @500 மி.லி/ஹெக்டேர்
    • டைமீதோயேட் 30 EC @500 மி.லி/ஹெக்டேர்
    • வேப்பங்கொட்டைச் சாறு 5%
    • நீம் அசால் 1%

Sorghum

 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016