வாஸ்குலர் வாடல் நோய்  
               
              அறிகுறிகள்: 
              
              
                - இலைகள்       மஞ்சளாதல், பின்னோக்கிக் காய்தல்.
 
                - தனி இலையில்       முதிரில் அறிகுறிகள் தோன்றும். பின் உடனடியாக வாடத்தொடங்கும். மங்கிய பச்சை நிறத்துடன் தோன்றும்.
 
                - வாடல்       அறிகுறிகள் மேலும், கீழும் பரவும். வறண்ட வானிலையின் போது வாட ஆரம்பிக்கும்.
 
                - தண்டுகளும்,       இலைகளும் பழுப்பு நிறத்தில் மாறி பின் மடியும். பாக்டீரியா சைலம் குழாய்கள் வழியாக       பரவும். தொடர்ந்து முழுச்செடியும் சுருங்கி, மடிந்து விடும்.
 
               
              வேர்களை  தாக்கும் அறிகுறிகள்: 
              
                - தாக்கப்பட்ட       தண்டுப் பகுதியிலிருந்து வெள்ளை நிற கசிவு வடிந்துக் கொண்டிருக்கும்
 
                - இந்த       பாக்டீரியல் கசிவு நுண்ணிய, பளபளப்பான நூல் போன்று உருவாகி, கத்தீ (அ) கையைக்       கொண்டு அழுத்தும்போது. 1 செ.மீ. நீளத்திற்கு வெளியே வரும்
 
                - வெட்டப்பட்ட       2 தண்டுகளை ஒன்றாகக் கொண்டு வரும் போது, அழுத்தினால், பின் தனித்தனி இழைகளாகப்       பிரியும்
 
                - நோயற்ற       செடியின் சாறு நீர் போன்று, இழை போன்று இருக்காது, சில சமயங்களில், இந்த சோதனையை       செய்துப் பார்ப்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும்
 
                - வயலில்       அறிகுறிகளை கண்டறிவதற்கு இந்த முறை பயன்படுகிறது. இந்த சோதனை வெள்ளரி மற்றும்       முலாம் பழம் போன்றவைகளில் ஒரளவிற்கு உதவி செய்யும்
 
                - பழங்களிலும்       அறிகுறிகள் காணப்படாது. சிறிய நீரில் ஊறிய திட்டுகள் மேற்புறத்தில் காணப்படும்.       இந்த திட்டுக்கள் ஒரே மாதிரியாக பளபளப்பான அழுகும் புள்ளிகளாக பழத்தின் மீது தோன்றும்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - அதிகளவில்       பயிரிடும் வயல்களில் பூச்சிக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். கார்பைரில்,       மாலத்தியான் (அ) ரோட்டினான் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்
 
                - வசந்த       காலத்தில் வண்டுகள் முதலில் தோன்றும் போது தெளிக்க வேண்டும் செடிகள் முளைக்க       ஆரம்பித்தவுடனேயே, கட்டுப்படுத்த வேண்டும்
 
                - கட்டுப்படுத்தாவிட்டால்       ஒன்று முதல் நான்கு தலைமுறை வண்டுகள் கூட இருக்கும். அதனால் வாராவாரம் பூச்சிக்       கொல்லிகள் தெளிக்க வேண்டும்.
 
              | 
             
               
             
               |