பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைப்பேன் : மைக்ரோசெபலோதிரிப்ஸ் அப்டாமினாலில்
  • இலைப்பேன்கள் மலர்க்கொண்டையை சேதப்படுத்தும்.
  • பூவிதழ் மற்றும் அல்லி இதழ்களைச் சுரண்டி தின்று சேதத்தை உண்டாக்கும்.
  • கடும் தாக்குதலின் போது பூவின் அனைத்துப் பாகங்களையும் தாக்கி சேதப்படுத்துகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • நாற்றாங்காலில் கார்பரில் மற்றும் டைகோபால் கலந்த கலவையைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • சந்திரிகா, பெங்களூர் லோக்கல் எல்லோ டபுள், எம்-7, பங்கஜ் மற்றும் எல்லோ ஸ்டார் போன்றரகங்களை பயன்படுத்தவும்
  • கிரீன்ஹவுஸ்ஸின் உள்ளேயும் வெளியேயும் நோய்தொற்றுயின்றி பராமரிக்கவும்
  • மஞ்சள் மற்றும் நீல நிற பொறியை பயன்படுத்தவும்
  • டைமீதோயேட் 30 EC அல்லது மாலத்தியான் 50 EC 1 மி.லி./லிட்டர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015
S