துவரை நீர் உறை நூற்ப்புழு : 
அறிகுறிகள் : 
              
                - பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாதல், வளர்ச்சி குன்றி  காணப்படும். மேலும் காய் பிடித்தல் மற்றும் பயிரின் வீரியம் குறைந்து காணப்படும். துவரை,  தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ், உளுந்து மற்றும் எள் போன்ற பல பயிர்கள் நூற்புழுவால்  பாதிக்கப்படுகின்றன.
 
                - பயிரின் நாற்றுப்பருவத்தில், முத்து போன்ற (அ) எலுமிச்சை  வடிவ வெள்ளைப் பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்.
 
               
                
கட்டுப்பாடு : 
              
                - வெப்ப காலங்களில் கோடை உழவு செய்தல் வேண்டும்.
 
                - 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பயிர்களை கொண்டு  பயிர் சுழற்சி செய்தல் வேண்டும்.
 
                - விதைக்கும் போது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (அ) டிரைகோடெர்மா  விரிடி @ 2.5 கிலோ/ எக்டர் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.
 
                - ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைகோடெர்மா  விரிடி  @ 5 + 5 கிராம் கொண்டு விதை நேர்த்தி  செய்ய வேண்டும்.
 
                   
                 
              |