மலர்ப் பயிர்கள்: 
             
            கனகாம்பரம் நூற்புழு : பிராட்டிலிங்கஸ் டிலாட்ரியை 
             
            
            அறிகுறிகள்:             
              கண்ணுக்குப் புலப்படாத நூற்புழுக்கள் வேர்களைத் துளைத்துச்  சாற்றை உறிஞ்சுவதால் செடி வளர்ச்சி குன்றி வாடிப் போகும். வேர்ப்பாகம் அழுகி கரும்புள்ளிகளுடன்  காணப்படும். 
            கட்டுப்பாடு: 
நாற்று  நடும்போது கார்போஃபியூரான் குறுணை மருந்தை ஏக்கருக்கு 12 கிலோ மண்ணில் இடலாம். தாக்கப்பட்ட  மற்றும் அதனைச் சுற்றியுள்ள செடிகளுக்கு ஃபோரேட் 10 சத குறுணை (ஏக்கருக்கு 10 கிலோ)  போடலாம்.
சம்பங்கி நூற்புழு : மிலாய்டோகைனி இன்காக்னிட்டா 
அறிகுறிகள்:  
  வேர்களில் சாறு உறிஞ்சப்படுவதால், பயிர் வளர்ச்சி குன்றி,  மலர் மகசூல் குறையும். வேர்களில் உருண்டையான முடிச்சுகள் காணப்படும். 
கட்டுப்பாடு: 
செடிக்கு 2 கிராம் வீதம் கார்போஃபியூரான் 3 சதக் குறுணை  இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். |