முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: துவரை

துவரை :

பூச்சி மற்றும் நோய்களை கண்காணித்தல்:

  • முதலில் வாரம் ஒருமுறை ஒவ்வொரு 10 கி.மி தூரத்திற்கு பூச்சியின் தாக்குதலை கண்காணிக்க வேண்டும் பின்பு 10 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்
  • அந்த பகுதியில் உள்ள இடங்களில் காய் துளைப்பானின் தாக்குதல் இருந்தால் பதிவு செய்ய வேண்டும்
  • பொருளாதார சேத நிலையை அறிய விவசாயிகளும், விரிவாக்க அமைப்புகளும் பூச்சிகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும்
  • வயலில் இரண்டு மணிநேரம் விளக்குப்பொறி வைத்து வெளிச்சத்துக்கு உட்படுத்தவேண்டும், முடிந்தால் மாலையில் 8 - 8.30 மணி வரைக்கும் வைக்க வேண்டும்
  • வரப்புகளில் சோயாமொச்சை அல்லது தட்டைப்பயிரை மூடுபயிராக பயிரிடலாம்
  • ட்ரைக்கோடெர்மா ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற கணக்கில் விதைநேர்த்தி செய்யலாம்
  • கார்பெண்டாசிம் + திரம் (1:2 கிராம் விகிதம்) அல்லது கார்பெண்டாசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு எடுத்து விதை நேர்த்தி செய்யலாம்
  • மெடலாக்சில் விதை நேர்த்தி செய்து பைட்டோப்த்தோரா அழுகல்நோயை கட்டுப்படுத்தலாம்
  • கார்போபியூரான் 8 கிலோ / எக்டர் எடுத்து மண்ணில் கலக்கலாம்

பயிர் வளரும் பருவம்:

  • ஊடு சாகுபடி மற்றும் கையால் களை எடுத்து 6 - 8 வாரம் வரை களைகளை கட்டுப்படுத்தலாம்
  • சிறய இடங்களில் புழுக்களை கையால் பிடித்தும், துணியை விரித்து செடியை ஆட்டிப் பிடித்தும் கட்டுப்படுத்தலாம்
  • பறவை தகங்கிகளை வைத்து புழுக்களை உண்ண வைக்கலாம்

பூக்கும் பருவம்:

  • தேமல் நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களை பிடுங்கி அழித்துவிட வேண்டும்
  • சிறிய இடங்களில் புழுக்களை கையால் பிடித்தும், துணியை விரித்தும் செடியை ஆட்டிப் பிடித்தும் கட்டுப்படுத்தலாம்
  • சிலந்திகள் மற்றும் குழவிகளை பாதுகாக்கலாம்
  • பறவை தாங்கிகளை வைத்து புழுக்களை உண்ண வைக்கலாம்
  • இனக்கவர்ச்சிப்பொறிகளை 50 மீட்டர் இடைவெளிவிட்டு எக்டர்க்கு 5 என்ற கணக்கில் வைக்க வேண்டும்
  • ஹெலிக்கோவெர்பா கவர்ச்சியூக்கியை பயன்படுத்தலாம், 20 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். கவர்ந்த பூச்சிகளை தினமும் எடுத்து அழிக்க வேண்டும்

 விதைக்கும் முன் பருவம்:

  • வேப்பம் புண்ணாக்கு அல்லது தொழுஉரம் இடவும்
  • கிராமத்திலும் அதை சுற்றி உள்ள இடங்களிலும் ஒரே இரகத்தை பயிர் செய்ய வேண்டும்
  • ஹிலிக்கோவெர்பா, வாடல் நோய், மற்றும் நூற்புழு தாக்குதலை குறைப்பதற்கு சோளத்தை ஊடு பயிர் விட வேண்டும்
  • எதிர்த்து அல்லது தாங்கி வளரக்கூடிய இரகங்களை பயிர்செய்யலாம்
  • முன்னரே முதிர்ச்சியாகும் இரகங்களை தேர்வு செய்ய வேண்டும்
  • இயற்கை உதிரிகளைப் பாதுகாக்க ஆமணக்கு அல்லது வளர்த்தியான சோளம் அல்லது மக்காச்சோளம் இரகங்களை பயிரிடலாம். இந்த இரகங்கள் பறவை தாங்கிகளாகவும் செயல்படும்
  • குட்டை ரக பயிர்களாகிய தட்டைப்பயிர், கொத்தவரை, அவரை, சோயாமொச்சை ஆகியவற்றை 8 - 10 வரிசை கழித்து பயிரிடலாம் 

விதைக்கும் பருவம்:

  • களத்தில் பார்க்கும்பொழுது வாடல், அழுகல் நோய் 20 சதவிதத்திற்கு மேல் காணப்பட்டால் துவரை மறுமுறை போடுவதை தவிர்க்கவும்
  • மரிக்கொழுந்தை ஊடுபயிராக போட்டு கவர்ச்சி பயிராக வளர்க்கலாம். பூக்கள் புழுக்களை முட்டையிடுவதற்கு கவரும், முட்டையிட்டபின் அதை சேகரித்து அழித்துவிடலாம்
  • என்.பி.வி 250 எல்.இ/எக்டர் தெளிக்கலாம்(முட்டைகள் மற்றும் முதல் பருவ புழுக்கள் இருந்தால் மட்டும்)
  • பி.டி 0.07 - 1 கிலோ / எக்டர் தெளிக்கலாம்
  • வேப்பம்கொட்டை சாற்றை 5 சதவிதம் எடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை 3 தடவை தெளிக்கலாம்
  • மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர் நீரில் (அ) குளோர்பைரிபாஸ் 3.5 மி.லி / லிட்டர் நீரில் (அ) கலந்து தெளிக்கவும்

காய்க்கும் பருவம்:

  • ஹெலிக்கோபெர்பா ஆர்மிஜெரா என்.பி.வி 250 எல்.இ/எக்டர் தெளிக்கவும்
  • மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி / லிட்டர் நீரில் (அ) குளோர்பைரிபாஸ் 3.5 மி.லி / லிட்டர் நீரில் (அ) கலந்து தெளிக்கவும்

பாதுகாத்தல் / சேமிப்பு:

  • சரியான பருவத்தில் அறுவடை செய்யவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015