| 
        
          
            
              | ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: நெல் |  
          
            | நெல்  சாகுபடிமுறை:  
                
                  களத்தை  சுத்தமாக வைக்க வேண்டும் மீதம்  உள்ள தாள்களை அகற்றிவிட வேண்டும், அப்படி செய்தால் துளைப்பானின் எண்ணிக்கையை அடுத்த  பயிருக்கு தாக்குவதை குறைத்து விடலாம் கோடை  உழவு செய்யவேண்டும் முட்டைக்  குவியல்களை கையால் எடுத்து அழிக்கவேண்டும் விதைப்பை  தள்ளிப்போட்டால் ஆளைக்கொம்பன் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம் புழுவால்  மடக்கப்பட்ட இலைகளை கிள்ளி எரிய வேண்டும். அப்படி செய்தால் புழுக்களின் எண்ணிக்கையை  குறைக்கலாம் விளக்குப்பொறி  அமைத்தால் தத்துப்பூச்சி மற்றும் இலை மடக்குப்புழு எண்ணிக்கையை குறைக்கலாம்  இரசாயன  முறை:  
                
                  0.02  சதவிதம் குளோர்பைரிபாஸ் மற்றும் 1 சதவிதம் யூரியாவுடன் நாற்றுகளின் வேர்களை நான்கு  மணி நேரம் முக்கி எடுத்து பின்னர் நடவேண்டும்15  நாட்களுக்கு நட்ட பிறகு குயினால்பாஸ் குருணைகளை 1 கிலோ / எக்டர்க்கு போடவேண்டும் 7  நாட்கள் இடைவெளியிட்டு இரண்டு முறை குயினால்பாஸ் அல்லது பாஸ்பாமிடான் 0.5 கிலோ / எக்டர்க்கு  தெளித்தால் இளம் புழுக்களை அழிக்கலாம் கதிர்நாவாய்  பூச்சிகயைக் கட்டுப்படுத்த மாலத்தியான் பவுடரை போடவும் நூவான்  0.5 கிலோ எடுத்து சூரியன் மறைந்த பிறகு படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த தெளிக்கலாம்  உயிரியல்  கட்டுப்பாடு:  
                
                  தண்டு  துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு பாரம் இடைவெளியில் 50,000 ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம்  ஒட்டுண்ணிகளை களத்தில் விட்டு கட்டுப்படுத்தலாம் சிரிடோரைனஸ்  லிவிடிபெனிஸ் 50 - 75 முட்டைகள் / சதுர மீட்டர்க்கு விடலாம்  |  
 |