கடுகு : 
              பூச்சி  மற்றும் நோயைக் கண்காணித்தல்:  
              
                
                  - பூச்சி  மற்றும் நோய் பெருக்கத்தினை கண்காணிக்க வேகம் மற்றும் தீவிர கள ஆய்வு செய்ய வேண்டும் 
 
                  - ஒவ்வொரு  5 லிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் எக்டர்க்கு 12 இடங்களில் ஆய்வுக்கு வெல்லும்  இரு புறங்களிலும் கண்காணிக்க வேண்டும்
 
                  - ஒரு  இடத்திற்கு 5 இடங்களில் பூச்சி மற்றும் நோய்களை பதிவு செய்ய வேண்டும் 
 
                  - அடிவிளியின்  எண்ணிக்கை கண்காணிக்க மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைக்கலாம்
 
                 
               
              விதைக்கும்  முன் பருவம்:  
              
                
                  - மண்மூலம்  பரவும் கிருமிகள் மற்றும் மண்ணுக்குள் இருக்கும் புழுக்களை நன்கு கோடை உழவு பாகங்களை  அழித்து விடவேண்டும் 
 
                  - வேண்டாத  தாவர பாகங்கள் மற்றும் உதிர்ந்த பாகங்களை அழித்துவிட வேண்டும்
 
                  - முன்பே  விதைத்தால் கடுகு அசுவினி மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்
 
                  - வேர்முடிச்சு  நோயைக் கட்டுப்படுத்த, மண்ணுடன் சுண்ணாம்பு 1 கிலோ / சதுர மீட்டர்க்கு கலந்து மண்ணின்  கார அமில நிலையை 7.2க்கு கொள்ளு வரலாம். அல்லது வேப்பம் புண்ணாக்கு 0.5 கிலோ / சதுரமீட்டர்க்கு  போடலாம்
 
                 
               
              விதைக்கும்  பருவம்:  
              
                
                  - விதைத்து  நான்கு வாரம் கழித்து நீர்பாய்ச்சினால் வர்ணமயமான நாவாய்பூச்சியினை கட்டுப்படுத்தலாம்
 
                  - மாலத்தியான்  1000மி.லி தெளிக்கவும்.
 
                  - களைகளை  நீக்கி பயிரை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்
 
                  - வேர்  அழுகல் நோய்க்கு மேன்கோசெல் 1 - 1.5 கிலோ / எக்டர் எடுத்து 750 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்க வேண்டும் 
 
                  - நோய்  தாக்கிய தாவரங்களை நீக்கவும்
 
                 
               
              பயிர்  வளரும் பருவம்:  
              
                
                  - புழுக்களை  சேகரித்து அழித்துவிட வேண்டும் 
 
                  - லெபிடாப்டிரன்  பூச்சிகளை கண்காணிக்க விளக்குப்பொறி பயன்படுத்தவும் 
 
                  - இலைப்புள்ளி  மற்றும் பாக்டிரியா அழுகல் நோய்க்கு ஸ்ரெப்டோசைக்லின் 500 பிபிஎம் தெளிக்கவும் 
 
                  - நாற்று  அழுகல் மற்றும் ஆல்டெர்னெரியா இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 0.2 சதவிதம்  அல்லது கார்பென்டாசிம் 0.05 சதவிதம் 
 
                  - சாம்பல்  நோயைக் கட்டுப்படுத்த 0.2 சதவிதம் கந்தகத்தினை தெளிக்கவும் 
 
                 
               
              பூக்கும்  பருவம்:  
              
                
                  - உதிர்ந்த  மொட்டுகளையும், பூக்கொப்பளங்களையும் எடுத்து அழித்துவிட வேண்டும் 
 
                  - பூவிலை  நோயைத் தாக்கிய தாவரங்களை அகற்ற வேண்டும் 
 
                  - மொட்டுப்  பிடிக்கும் தருணத்தில் டைமிதோயேட் 0.03 சதவிதம் அல்லது என்டோசல்பான் 0.07 சதவிதம் 
 
                 
               
              காய்க்கும்  பருவம்:  
              
                
                  - பூவிலைநோய்  தாக்கிய பயிர்களை வேரோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும் 
 
                  - குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) டைமிதோயேட் 0.03 சதவிதம் (அ) குயினால்பாஸ்  150 - 200 லிட்டாஸ் ஏதேனும் ஒரு மருந்தினை எடுத்து ஒரு எக்டர்க்கு தெளிக்கலாம் 
 
                  - வர்ணமயமான  பூச்சி மற்றும் கடுகு குளவியைக் கட்டுப்படுத்த மெத்தில் பாரத்திலானை (25 கிலோ / எக்டர்)  தெளிக்கவும் 
 
                  - வாரத்திற்கு  இரண்டு முறை இணைத்து வாம் புழுக்களை சேகரித்து அழித்துவிடலாம் 
 
                  - ஆல்டெர்னெரியா  இலைப்புள்ளி, வெள்ளை துரு, மற்றும் இதர நாற்று நோய்களைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம்  0.1 சதவிதம் (அ) ஏப்ரான் 6 கிராம் / கிலோ விதைக்கு பயன்படுத்தலாம் 
 
                 
               
              பயிர்  வளரும் பருவம்:  
              
                
                  - கடுகு  குளவிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 500மி.லி அல்லது என்டோசல்பான் 625 மி.லி அல்லது  குளினால்பான் 150 - 200 லிட்டர் / எக்டர் தெளிக்கவும் 
 
                  - இணைந்து  வாழும் புழுக்களை சேகரித்து அழித்துவிடலாம் 
 
                  - மெதில்  பாரத்தியான் 5 சதவிதம் 25 கிலோ / எக்டர்க்கு தெளிக்கவும் 
 
                  - நோய்  தென்பட்டால் மெடலாக்லலிஸ் 8 சதவிதம் + மான்கோசெப் 64 சதவிதம் 25 கிலோ / எக்டர்க்கு  தெளிக்கவும் (அ) மேன்கோசெப் 1500 - 2000 கிராம் / எக்டர்க்கு தெளிக்கவும் 
 
                 
               
              பூக்கும்  பருவம்:  
              
                
                  - அசுவினி  தாக்கிய முதல் பருவத்திலே அழித்துவிட வேண்டும் 
 
                  - ஆக்ஸிடெமட்டான்  மெதில், டைமிதோயேட், என்டோசல்பான், குயினால்பாஸ், மாலத்தியான் 625 - 1000மி.லி /  எக்டர்க்கு தெளிக்கவும் 
 
                  - இணைந்து  வாழும் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்
 
                 
               
              காய்க்கும்  பருவம்:  
              
                
                  - அசுவினியைக்  கட்டுப்படுத்த இரசாயன முறையைக் கையாளவும்.
 
                 
               
           |