| ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: மாம்பழம் | 
             
           
         
       
        
          
            மாம்பழம் 
              சாகுபடி  முறை: 
              
                
                  - விழுந்து  கிடக்கும் பழங்களை சேகரித்து அழிக்கவேண்டும். ஏனென்றால் இவ்வாறு வெய்தால் கூன்வண்டு  மற்றும் பழஈ போன்றவை பரவாமல் தடுக்கலாம் 
 
                  - மரத்தை  சுற்றியும் நன்கு கோடை உழவு செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் மாவுப்பூச்சியின் முட்டைகளையும்,  பழஈ யின் கூட்டுப்புழுக்களையும் அழித்துவிடலாம் 
 
                  - கிளிரோடென்ட்ரான்  இன் பார்சுனேட்டம் மற்றும் புல்களை அகற்றினால் மாவுப்பூச்சியின் எண்ணிக்கையை குறைக்கலாம் 
 
                 
               
              இரசாயன  முறை:  
              
                
                  - பிப்ரவரி  மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து 3 வாரத்திற்கு ஒருமுறை மோனோகுரோட்டோபாஸ் நான்கிலிருந்து  ஜந்துமுறை தெளித்தால் தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி, பழஈ மற்றும் கூன் வண்டுகளை அழிக்கலாம் 
 
                  - மோனோகுரோட்டோபாஸ்  (0.01 சதவிதம்), பென்பலரேட்  (0.01 சதவிதம்), பெர்மெத்ரின்  (0.02 சதவிதம்), டைமிதோயேட்  (0.06 சதவிதம்) ஏதாவது ஒரு மருந்தினை 21 நாட்கள் இடைவெளியிட்டு இரண்டிலிருந்து  மூன்றுமுறை தெளித்தால் இலை கொத்துப்புழு, தண்டு துளைப்பான், சில்லிட் ஆகியவற்றின்  தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 
                  - இடிசிடி  கலப்பு அல்லது பெட்ரோல், மண்ணென்ணெய் ஆகியவற்றை டைகுளோர்பாஸ் அல்லது மோனோகுரோட்டோபாஸ்  (0.05 சதவிதம்) கலந்து, மரத்துவாரத்தினுள் உள்ளவற்றை சுத்தம் செய்து, மருந்தை உள்ளே  ஊற்றவேண்டும். பின்பு மரத்துவாரத்தை மண்சக்தியைக்கொண்டு அடைத்தால் மாமரத்தண்டு துளைப்பானை  கட்டப்படுத்தலாம் 
 
                 
               
              உயிரியல்  கட்டுப்பாடு:  
              
                
                  - உயிரியல்  கட்டுப்பாடு மறை நன்கு பயன்தராது.
 
                 
               
         
             | 
           
         
  |