| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
                   
                
                | 
             
           
         
     
        
          
            சாம்பல் நிற வண்டு: கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா             
             | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - முதல் பயிரை விட, மறு தாம்புப் பயிரில் இப்பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகின்றது. 
 
                - இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகுபோன்று மாறிவிடும். 
 
                - உச்சிப் (குருத்தின்) பகுதி முழுதும் காய்ந்து விடும். 
 
                - பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும். 
 
                - வேர் மற்றும், அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் விளைவிக்கும். 
 
                - பாதிக்கப்பட்ட கரும்புகள்  வேரற்று கீழே சாய்ந்து விடும்.
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                மஞ்சள் இலைகள் | 
                காய்ந்த உச்சிப் (குருத்தின்) பகுதி  | 
                பாதிக்கப்பட்ட கரும்பு | 
                பாதிக்கப்பட்ட வேர் | 
               
              | 
           
          
            பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது.  இதன் முட்டைகள் உருண்டை வடிவில் மண் தவரினால் சூழப்பட்டிருக்கும். 
 
                - புழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C)  எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.  கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும். 
 
                - கூட்டுப்புழு: கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும்.  மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடு மண்ணால் ஆனது. 
 
                - வண்டு: வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் கருமை நிறமாக மாறிவிடும். 
 
                | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                புழு | 
                  | 
                வண்டு | 
               
              | 
           
          
            | கட்டுப்படுத்தும் முறை:
               உழவியல் முறைகள்:  
              
                - கோடை காலங்களில் அறுவடை முடிந்த உடன் ஒரு ஆழமான உழவு செய்ய வேண்டும். 
 
                - வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திறுக்க வேண்டும் இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும். 
 
               
              இயற்பியல் முறைகள்:  
              
                - ஒரு கோடை மழைக்கு பிறகு, வேப்பமரம்,  தீக்குச்சி மரம், வேலமரம் அருகே இருக்கும் வண்டுகளை எடுத்து அழிக்க வேண்டும்.  இதற்கு உயர்ந்த ஒளி உடைய பெட்ரோமார்க்ஸ் விளக்கை பயன்படுத்தி வண்டுகளை அழிக்க வேண்டும்.  
 
               
              இரசாயன முறைகள்:  
              
                - போரேட் 10 ஜி / கார்போபியுரான் 3 ஜி / கியுனால்பாஸ் 5ஜி @ 25 கி.கி/ஹெ என்ற அளவில் பயன்படுத்தவும். 
 
                - லின்டேன் 1.6 டி 50 கி.கி/ஹெ என்ற அளவில் வேர் மண்டலத்திற்கு அருகே இடலாம். 
 
                - உயிரியல் முறை: ஒரு எக்டருக்கு 2.5 கி.கி Beauveria brongniortii தொழுஉரத்துடன் கலந்து  சாம்பல் நிற வண்டு தாக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். 
 
                | 
           
          
            Content Validators:  
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 | 
           
               
  |