| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
                   
                
                | 
             
           
         
     
        
          
            பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா             
             | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - குஞ்சுகளும், வளர்ந்த      பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி தாக்கப்பட்ட      இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும்.  இவை சோகையின்      நிறத்தினை ஓரங்களில் மஞ்சளாக மாறி காய்ந்து போகும். 
 
                  - பின்பு இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும் 
 
                  - பூச்சிகள் இலைப்      பரப்பில் தேன் போன்ற திரவத்தினை  சுரக்கச் செய்வதால்      கரும்பூசணப் படலம் காணப்படும்.      எனவே      இலைகள்      எரும்பினால் கவரப்பட்டு கருமையாக      மாறிவிடுகின்றது.  
 
                  - வெள்ளை நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும். 
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                இலைகளில் வெள்ளை நிற துாள்கள் | 
                தேன் போன்ற திரவங்கள்  | 
                நிலம்/மண் மீது வெள்ளை நிறத் துகள்கள்  | 
                பாதிக்கப்பட்ட வயல்  | 
               
              | 
           
          
            | பூச்சியின் விபரம்: 
               | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                இளம் குஞ்சு | 
                  | 
                அசுவினி | 
               
              | 
           
          
            | கட்டுப்படுத்தும் முறை:
               உழவியல் மற்றும் இயற்பியல் முறைகள்:  
              
                - இரட்டைப் பார் நடவு முறையைப் பின்பற்றுதல். 
 
                - அதிகப்படியான நைட்ரஜன் அல்லது அம்மோனியம் உரமிடுதலைத் தவிர்க்கவும். 
 
                - தொளு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரம் ஆகிய அங்கக உரங்களை முடிந்த அளவு பயன்படுத்துதல். 
 
                - வரிசையாக கரும்புகளை விட்டம் கட்டவேண்டும்.
 
                - பூச்சித் தாக்குதல் உள்ள கரணைகளை நடவுக்குப் பொருளாக பயன்படுத்தக்  கூடாது. 
 
               
              உயிரியல் முறை:  
              
                - டையப்போஅபிடிவோரா குடும்பத்தினைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை வயலில் வளரச் செய்யலாம்.        
 
                - பிவேரியா பாஸியானா, கிளாடாஸ்போரியம், ஆக்ஸிஸ்போரம், மெட்டாரைஸோபியம் அனிசோபிலே, வெர்டிசிலியம் லெகானி போன்ற உயிரிகளையும் ஒட்டுண்ணியாகப் பயன்படுத்தலாம். 
 
                - வயலில் என்கார்சியா பிளேவோஷ் கூட்டலம் விடவேண்டும்.
 
               
              இரசயான முறை:  
              
                - குளோர் பைரிபாஸ் 20 EC கரைசலினை 2 மி.லி/லி என்ற அளவில் எடுத்து விதைக் கரணைகளை நனைத்துப் பின் நடலாம்.  
 
                - போரேட் 10 ஜி (நி) 5 கி.கி/ஏக்கர் அல்லது அசிப்பேட் 75 எஸ்.பி 1 கி/லி குளோர்பைரிபாஸ் 20 EC 2 மி.லி/லி, 
 
                - மாலத்தியான் 50 EC 2 மி.லி/லி, டைமெத்தோயேட் 30 EC 1.7 மி.லி/லி ஆக்ஸிமெட்டான்மீதைல் 25 EC 1.3 மி.லி/லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கலாம்.  
 
                - மாலத்தியான் 5% பொடியினை ஏக்கருக்கு 10 கி.கி என்ற வீதம் வயலில் இடலாம். 
 
                | 
           
          
            Content Validators:  
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 | 
           
               
  |