கழுத்து  அழுகல் – போபரிடிஸ் அலி, போட்ரிடிஸ். ஸ்கோமோசா, மற்றும் போட்ரிடிஸ். சினேரியா 
              
              அறிகுறிகள்: 
              
                
                  - பொதுவாக அறிகுறிகள் அறுவடை செய்த பிறகு  தான் தோன்றும். நோய் தாக்குதல் வயலில் காணப்படும். அறுவடைக்கு முன்போ அல்லது பின்போ  500 - 750 ஃபேரன்ஷீட்டில் குளிர்ந்த ஈரப்பதமான வெப்பநிலையில்  கொள்ளை நோய் உருவாகும்.
 
                  - அறுவடை செய்யும் போது வறண்ட வெப்பநிலை  இருந்தால் சேமித்து வைக்கும் போது ஏற்படும் இழப்பு குறைவாக இருக்கும்
 
                  - அறிகுறிகள் முதலில் குமிழின் கழுத்துப்  பகுதியில் உள்ள திசுக்கள் மென்மையாக மாறி காணப்படும் அல்லது அந்தப் பகுதியில் மிக அரிதான  புண்கள் தோன்றும்
 
                  - விளிம்புகள் நோய் தாக்கப்பட்ட திசு  மற்றும் திடமான திசுக்களை பிரித்துவிடும். நோய் தாக்கப்பட்ட திசுக்கள் சிறுத்தும்,  மென்மையாகவும் பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில் தோன்றும். இந்த நோய்  படிப்படியாக அடியில் உள்ள குமிழைத் தாக்கும்
 
                  - பிறகு முழு குமிழும் காய நேரிடும். இரண்டாவது  தாக்குதல் மென்மை அழுகல் நுண்ணுயிரிகள் நீர் அழுகல் நோயை உருவாக்கும்.
 
                  - கடினமான, வடிவமில்லாத விதை போன்றும்,  ஸ்கிளிரோடியா, கழுத்துப் பகுதியிலுள்ள செதில்களுக்கு இடையே தோன்றும்
 
                  - பூசணங்களினால் ஏற்படும் கழுத்தழுகல்  நோய் குளிர் காலத்தில் முன்பே நோய் தாக்கப்பட்டு சிதைந்த வெங்காயத்தின் மேல் மண்ணிலேயே  காணப்படும் மற்றும் சேமிப்பு கொட்டகையில் உள்ள குப்பைப் பொருள்களிலும் பரவும்.
 
                 
               
              மேலே 
              நீலப்  பூசண அழுகல் – பெனிசிலியம் ஸ்பீசியஸ் 
              
              அறிகுறிகள்: 
              
                
                  - நீலப் பூசணம் பொதுவாக அறுவடை செய்யும்  பொழுதும், சேமித்து வைக்கும் பொழுது காணப்படும். தொடக்க அறிகுறிகள் செதில்களின்  வெளிப்புறத்தில் நீர் கோத்தது போன்று தோன்றும்
 
                  - பச்சை நிறத்தில் இருந்து நீலம் கலந்த  பச்சை நிறத்தில் மாறிவிடும். பின் நைவுப்புண்களின் மேல் சாம்பல் பூசணம் ஏற்படும். நோய்  தாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சதையுள்ள செதில்கள் சாம்பல் நிறமாக வெட்டும் பொழுது தோன்றும்
 
                  - முன் நிலைகளில் பாதிக்கப்பட்ட குமிழ்கள்  அழிந்து நீர் அழுகலாக மாறிவிடும்
 
                  - பெனிசிலியத்தின் இனத்தால் நீலப் பூசணம்  உருவாகும். இந்தப் பூசணங்கள் பொதுவாக சேப்ரோமைட்ஸினால் செடிகள் சிதைவுற்றும், திசுக்கள்  முதிர்ந்தும் காணப்படும். அடுத்தப்படியாக வெங்காய குமிழ்களிலும், பூண்டுகளிலும் புண்கள்  சிறாய்வுகள் அல்லது தவிர்க்க முடியாத கழுத்து திசுக்கள் ஏற்படும்.
 
                  - ஒருமுறை குமிழுக்குள் புகுந்தால், சதையுள்ள  செதில்களில் பூசண இழை வளரத் தொடங்கும். இறுதியாக பூசண வித்துக்கள் அதிகப்படியாக நைவுப்புண்  மற்றும் புண்களில் தோன்றும்
 
                  - உகந்த நிலையில் மிதமான வெப்பநிலை 700  - 770 பே (210 - 250 செ) மற்றும் அதிக ஈரப்பதம்  உள்ள வெப்ப நிலையும் அடங்கும்.
 
                 
               
              மேலே 
              ஃபுசேரியம்  அடி அழுகல் – ஃபுசேரியம் ஆக்ஸிஸ்போரம், ஃபுசேரியம் ஸ்பீசியஸ்.சிபே 
              அறிகுறிகள்: 
              
                
                  - தொடர்ந்து மஞ்சள் நிறமாக மாறி, பின்னோக்கி  காயத் தொடங்கும்
 
                  - வெள்ளை பூசண வளர்ச்சி குமிழின் அடிப்பகுதியில்  தோன்றும் 
 
                  - மண் மூலம் இயற்கையாகப் பரவும்
 
                  - புண்கள் மற்றும் வேர் வடுக்கள் தான்  நோய்க் காரணிகள் உருவாகும் முதல் படி.
 
                 
               
              மேலே 
              கருப்புப்  பூசணம் – அஸ்பர்ஜிலஸ் நைகர் 
              அறிகுறிகள்: 
              
                
                  - நோய் தாக்குதல் கழுத்துப் பகுதியில்  உள்ள திசுக்களில் தோன்றும் பின் இலைத் தழைகள் முதிரும் பருவத்தில் இறந்துவிடும்
 
                  - பாதிக்கப்பட்ட குமிழ்கள் நிறம் மாறி,  கழுத்துப் பகுதிகளை சுற்றி கருப்பு நிறமாகவும், பாதிக்கப்பட்ட செதில்கள் உதிர்ந்தும்  காணப்படும்
 
                  - சாம்பல் போன்று கருப்பு நிற பூசண வித்துக்கள்  கோடுகள் போன்று பொதுவாக நரம்புகளின் மேல் மற்றும் நடுவில் வறண்ட செதில்கள் தோன்றும்
 
                  - நோய் தாக்குதல் முதலில் கழுத்துப் பகுதியில்  பரவி சதையுள்ள செதில்களின் நடுப்பகுதி வரை பரவும்.
 
                  - நோய் தாக்கப்படும் ஆரம்ப காலத்தில்,  முழு குமிழுமே கருப்பாக மாறி, இரண்டாவது தாக்குதலாக நுண்ணுயிரி மென்மை அழுகல் நோயால்  குமிழ்கள் மென்மையாகவும் காணப்படும்
 
                  - சில குமிழ்களில் வெளிப்புற அறிகுறிகள்  தென்படாது
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - 4 கி/கி.கி தையாமின்னை வைத்து விதை நேர்த்தி  செய்ய வேண்டும்
 
                  - 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட் அல்லது  0.2% க்ளோரோதலோனில், அல்லது 0.2% ஜினெப் அல்லது 0.2% மேன்கோசெப்பை மூன்று முறை  தழை தெளிப்பாக தெளிக்கவும்
 
                  - உற்பத்தியாளர்கள் பயிர் சுழற்சியை மேற்  கொள்ள வேண்டும். சேமிப்பு வைத்திருப்பதிலிருந்து அழிவைக் குறைக்க அறுவடை செய்யப்பட்ட  குமிழ்கள் திடமாக இருக்க வேண்டும். நோய் தாக்கப்பட்டு இருந்தால் அதனை திடமான குமிழ்களுடன்  இணைக்கக்கூடாது
 
                  - 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைடை மண்ணில்  தெளிக்கவும்
 
                 
               
            மேலே 
             |