பூசண  சொறி நோய் (போமோ எக்ஸிகுவா) : 
              
                
                  - காய்களின்       மீது நீரில் ஊறியது போன்ற நைவுப்புண் தோன்றும்.
 
                  - ஒழுங்கற்ற       விளிம்புகளின் மீது கரும் புள்ளிகள் காணப்படும்.
 
                  - பூஞ்சாண்       உருவாகி உருவான பகுதிகள் கருப்ப நிறமாக மாறிவிடும்.
 
                  - பெரோசிலில்       வெண்டை அறுவடை பின்சார் அழுகல் நோயால் (ரைசக்டோனியா சொலானி) 80 – 90 சதவிதம்       காய் சேதம் அடைந்து உள்ளது.
 
                  - காய்       முழுவதுமாக அழுகிவிடும். காய்கள் இயல்பு மாறா பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு       நிறமாக மாறிவிடும். நோய் தாக்கப்பட்ட திசுக்கள் முழுவதும் பூசண இழையினால் மூடிவிடும்.
 
                  - உட்புறம்       முதிராத விதைகள் மற்றும் சூல்காம்பும் தாக்கப்படும்.
 
                  - நோய்       தாக்கப்பட்ட திசுக்கள் லேசான பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.
 
                 
               
              வெளிப்புறம், பூசண  இழை மென்மையாகவும், மெல்லிய நிறத்திலும் காணப்படும், பழத்தின் மேற்புறம் அடர் நிறத்தில்  கெட்டியான பூசண இழைகள் அதிக அளவில் தோன்றும். 
               
               |