1. கோதுமையின் இலைத்துரு / பழுப்பு  துருநோய் : பக்னீசியா ரீகாண்டியா 
            
              - நோயின்       முதல் அறிகுறியாக இலைகளின் மீது ஆரஞ்சு நிறத்தில் யுரிடோ வித்து காணப்படும்.       இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல பகுதிகளிலும் தென்படும்.
 
              - இலை       தடித்த கூடுகள் காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல் பகுதிகளிலும் தென்படும்.
 
              - இவை       தடித்த புள்ளிகளாகத் தோன்றும். இவை உடைந்து யுரிடோ வித்துக்கள் வெளிப்படும்.
 
              - இதன்       பின்பு கருநிறமுடைய டீலியோ வித்துக்கூடுகள் தோன்றுகின்றன. 
 
              - இது       வயலில் உள்ள குச்சிகளிலும், தேவையற்ற செடிகளிலும் தங்கி இருக்கும்.
 
              - இதனுடைய       மற்றொரு உயிர் வாழி தாவரம்: தாலிக்டிரம் வகையைச் சார்ந்தது.
 
              - மலைகளிலிருந்து       வரும் யுரிடோஸ்போரிஸின் மூலம் இந்நோய் பரவுகிறது.
 
             
            
              
                  | 
                கட்டுப்பாடு 
                  
                    - பயிர்       சுழற்சி மற்றும் கலப்பு வகை பயிர் முறை பின்பற்றலாம்.
 
                    - அதிகமான       தழைச்சத்தை தவிர்க்கவேண்டும்.
 
                    - கந்தகத்தை       35-40 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கலாம் அல்லது மேங்கோசெப் 2 கிராம் /       லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.
 
                    - நோய்       எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான லெர்மாரோஜா, சேபெட் லெர்மா, சொனாலிகா மற்றும்       சோடிட்டிலெர்மா ஆகியவை பயன்படுத்தலாம்.
 
                    | 
               
             
            
            
            மேலே 
            2. தண்டுத்துரு அல்லது கருந்துரு  நோய்: பச்சினியா கிராமினிஸ் எஃப்பிசிஸ் 
              அறிகுறிகள் 
            
              - இந்நோய்       இலை, இலையுறை, தண்டு, பூப்பகுதிகள் ஆகியவற்றைத் தாக்கும். தாக்கப்பட்ட பகுதிகளில்       வெளிர்ப்பச்சைப் பகுதிகள் ஆரம்பித்தல் காணப்படும். வெளிர் பச்சை பகுதியில் யுரிடோ       வித்துக்கள் உண்டாகின்றன. இலை பரப்பு பார்க்கும் பொழுதே பழுப்பு நிறத்தோற்றத்தை       அளிக்கின்றன. தாக்கப்பட்ட பாகங்கள் விரைவில் காய்ந்துவிடுகின்றன.
 
              - நோய்       தீவரமாகும் பொழுது நோயுள்ள செடிகள் வளர்ச்சிக் குன்றிக் குட்டையாக இருப்பதால்       நீண்ட தொலைவிலிருந்தே அவற்றைக் கண்டு கொள்ளலாம்.
 
              - பாதிக்கப்பட்ட       பயிர்களில் சிறுசிறு கதிர்களே தோன்றுகின்றன. கதிர்களில் மணிகள் இருப்பதில்லை.       அவை இருப்பினும் சுருங்கிச் சிறியவையாகக் காணப்படும்.
 
              - பழுப்பு,       தடித்த சுவருடையதாகவும் காணப்படுகிறது.
 
              - மாற்று       வழி உயிர் தாவரம்: பெர்பெரிஸ் வகையைச் சார்ந்தது.
 
              - மலைவாழ்       யுரிடொவித்துக்கள் மூலம் பரவுகிறது.
 
             
            
              
                  | 
                கட்டுப்பாடு 
                  
                    - நோயின்       முதல் அறிகுறியாக இலைகளின் மீது ஆரஞ்சு நிறத்தில் யுரிடோ வித்து காணப்படும்.       இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல பகுதிகளிலும் தென்படும்.
 
                    - இலையில்       தடித்த கூடுகள் காணப்படும். இவை கூட்டம் கூட்டமாக இலையின் பல் பகுதிகளிலும் தென்படும்.
 
                    - இவை       தடித்த புள்ளிகளாகத் தோன்றும். இவை உடைந்து யுரிடோ வித்துக்கள் வெளிப்படும்.
 
                    - இதன்       பின்பு கருநிறமுடைய டீலியோ வித்துக்கூடுகள் தோன்றுகின்றன. 
 
                    - இது       வயலில் உள்ள குச்சிகளிலும், தேவையற்ற செடிகளிலும் தங்கி இருக்கும்.
 
                    - இதனுடைய       மற்றொரு உயிர் வாழி தாவரம்: தாலிக்டிரம் வகையைச் சார்ந்தது.
 
                    - மலைகளிலிருந்து       வரும் யுரிடோஸ்போரிஸின் மூலம் இந்நோய் பரவுகிறது.
 
                    | 
               
             
            மேலே 
            3. கோதுமை உதிரிக் கரிப்பூட்டை :  உஸ்டிலாகோ ட்ரிடிசி 
               
            அறிகுறிகள் 
            
              -                 கதிரிலுள்ள  தானியங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கறுப்பு நிற பூசண வித்துக்கள் அடங்கிய கரிப்பூட்டையாக  மாறுகின்றது.
 
              -  பாதிக்கப்பட்ட  செடியில் பொதுவாக கதிர் பிரியும் வரை அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை.
 
              ஆனாலும்  சோனலிக்கா என்ற இடத்தில் இரகத்தில் பாதிக்கப்பட்ட செடிகளின் கதிருக்கும் அடியிலள்ள  இலை மஞ்சள் நிறமடைகிறது.  
              - இவ்வாறான அறிகுறிகள் கதிர்கள் பிரிந்து கரிப்பூட்டை தோன்றுவதற்கு  முன்பாகவே காணப்படுகின்றன. 
 
              - இந்த இரகத்தில் பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சி குறைந்துவிடுகிறது.  
 
              - பாதிக்கப்பட்ட கதிர்களில் தானியங்கள் இருப்பதில்லை. 
 
              - சிலவகைகளில் பாதிக்கப்பட்ட சில  தூர்களிலிருந்து வெளிப்படும் கதிர்களில் மட்டுமே கரிப்பூட்டையின் அறிகுறிகள் வெளிப்படும்.
 
             
            
                
                கட்டுப்பாடு 
                  
                    - கார்பாக்சின்       2 கிராம் / கிலோ அல்லது விட்டாவேக்ஸ் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி       செய்யலாம்.
 
                    - குளிர்ந்த       நீரினில் விதைகளை 4 மணி நேரம் நனைத்து வைத்திருத்தல்.
 
                    - வெந்நீரில்       132 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் வெப்பநிலையில் 10 நிமிடங்கள் வைத்திருந்து நிழலில்       உலரவைத்து பின்பு விதைக்கப் பயன்படுத்தலாம்.
 
                    - கடும்       வெய்யிலில் நாட்களில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை நீரில் விதைகளை அமிழ்த்து       வைத்திருந்து பின்பு 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெய்யிலில் சிமெண்ட் தரையில்       விதைகளை உலர்த்தவேண்டும்.
 
                    | 
               
           
            மேலே 
            4. வரி  துருநோய் /மஞ்சள் துரு நோய் : பச்சினியா ஸ்ட்ரைபார்மிஸ் 
               
              அறிகுறிகள்:  
             
            
              - துருநோயி       வித்துக்கள் மஞ்சள் (அ) ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகளில் நேரான கோடுகள்       காணப்படும்.
 
              - ஸ்போர்       வித்துக்கள் இலை உறைகள், கதிரின் கழுத்துப்பகுதி, கதிர்களின் காணப்படும்
 
              - பயிர்க்       குப்பைகள், வேண்டாத செடிகளில் உயிர் வாழும்
 
              - ஓம்புயிரி: அறிப்படவில்லை
 
              - பரவுதல்: பயிர்க்குத்துக்களிலிருந்து யூரிடோஸ்போர்கள் மூலம் பரவும்
 
             
             
             
               
              மேலே 
             |