1.பிளாஸ்ட் 
            அறிகுறிகள் 
            
              - நோயின்       தீவிர தாக்கத்தில் பயிர் காய்ந்தது அல்லது எரிந்தது போல் தோற்றமளிக்கும், அதனால்       இப்பெயர்(பிளாஸ்ட்) பெற்றது.
 
              - பூட்டை       வெளிவந்த பின்பு இந்நோய் ஏற்பட்டால் பயிர் குட்டையாக வளரும்.
 
              -  பூட்டையின்  கழுத்துப்பகுதியில் கருப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி உதிர்ந்து விடும் அல்லது பகுதி  மட்டுமே பூட்டைப் பிடிக்கும், கழுத்துப் பகுதியில் பிளவு ஏற்பட்டு பூட்டை ஒடித்திவிடும்.
 
              - கணு  கருகல் : கணுப் பகுதியில் கருப்பாகி ஒடிந்துவிடும்.
 
             
 கட்டுப்பாடு 
              
            
              - விதையை  கேப்டான் / திரம் 4 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில்  நேர்த்தி செய்யலாம்.
 
              - டிரைசைக்லசோல்  500 கிராம் அல்லது எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது கார்பன்டாசிம் 250 கிராம் / எக்டர்  என்ற அளவில் தெளிக்கலாம்.
 
             
            மேலே 
            2.தேமல் நோய் : போட்டி வைரஸ் 
              கீற்று தேமல் நோய் : நியூக்கிளியோரேப்டோவைரஸ் 
              நோய் பரப்பும் கிருமி : சிகாமுலினா பைபங்டெல்லா சி.சினைய் 
             
            அறிகுறிகள் 
            
              -  கீற்று  தேமல் நோயில் முதலில் அறிகுறியானது விதைத்த 45 நாள் கழித்து புனல் இலைகளில் சிறிய  வெளிர் நிறமுடைய புள்ளிகளாகத் தோன்றும்.
 
              -  பின்பு  இப்புள்ளிகள் சேர்ந்து சிறிய கீற்றுகளாகத் தோன்றும்.
 
              -  தீவிர  நோய் தாக்கத்தில் பயிர் மஞ்சளாக மாறும்.
 
              -  நோய்  தாக்கிய பயிர் கணுப்பகுதியில் கிளைகளைத் தோற்றவித்து, தூர்களில் கதிரின்றி காணப்படும்.
 
              - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட பயிரில் கதிர் வெளிவராமலும், அப்படியே கதிரை தோற்றுவித்தால் அவை உமியாகவும்  காணப்படும்.
 
               
             
            
             
            கட்டுப்பாடு
            
              - ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொலிலியான  மீதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டாபாஸ் 500 மில்லி / எக்டர் தெளிக்கலாம். 
 
              - இம்மருந்தை அறிகுறி தெரிந்தவுடனும் தேவைப்பட்டால் 20 நாட்களுக்கு ஒரு முறையும் தெளிக்கலாம்.
 
             
            மேலே 
             |