உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல் | 
             
           
         
     
        
           
            |  ஒட்டுண்ணியை பெருமளவில் உற்பத்தி செய்தல் | 
           
          
            |   பிரக்கிமிரா  பேரளவு உற்பத்தி  | 
           
          
            பிராக்கி மெரா தென்னை கருந்தலைப்  புழுவின் முக்கிய ஒட்டுண்ணியாகும். அதிக ஓட்டுண்ணித் தன்மை கொண்டது, கோடை மற்றும் நீண்ட  வறட்சி அதிக இனம் பெறும் தோட்டங்களில் சீராக பரவக் கூடியது.                உற்பத்தி செய்முறை : 
              
                - 50 பிரக்கிமிரா அந்துப்பூச்சிகளை (இரு பாலினமும் ) 17.5       x 6.75 செ.மீ கொண்ட உலர்ந்தஉருளை ஜாடியில் இடவும். இடையில் 12 செ.மீ       நீளமும் 6.25 செ.மீ அகலமும் உள்ள அட்டைதுண்டு வைக்கவும் . இதனால் ஓட்டுண்ணிகள்       நகரவும் ஓய்வெடுக்கவும் எளிதாகும்.
 
                - ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய திணி கொண்டு கட்டி கிடை மட்ட மட்டமாக வைக்கவும். 
 
                - 4       -5  நாட்களுக்குஒரு முறை       ஓட்டுண்ணிகளை புதிய ஜாடிக்கு மாற்றவும்.
 
                - தினசரி, தேன் துளிகளை மெழுகு பூசிய தாளில் வைத்து ஓட்டுண்ணியின் அந்துப்பூச்சி       களுக்கு உணவாக அளிக்கவும். 
 
                - 3 – 4  நாட்களுக்கு, ஜாடியில் உள்ள ஓட்டுண்ணிகளை       10 – 15 நிமிடத்திற்கு குறைந்த சூரிய ஒளியில் வைக்கவும்.
 
                - சூரிய ஒளி வெளிப்பாடு இனச்சேர்க்கை தூண்டுகிறது. 
 
                - கருந்தலைப் புழுவின் கூட்டுப் புழுவை அட்டைப் பலகையில் (12 x 6 செ மீ) வைக்கவும் 
 
                - அட்டைப் பலகையில் வைக்கப்பட்ட கூட்டுப் புழுக்களை கிடைமட்டமாக வைக்கப்பட்ட       ஜாடியில் உள்ள இனச்சேர்க்கையடைந்த ஓட்டுண்ணிகளுக்கு ஒட்டுண்ணுதலுக்காக வெளியிடவும். 
 
                -  பெண் ஒட்டுண்ணியின் செயற்பாடு பொறுத்து,       கூட்டுப் புழுக்களை 4-6 மணி நேரத்திற்கு ஒட்டுண்ணுதலுக்காக வைக்கவும்.
 
                - ஒட்டுண்ணியின் உயர் ஓட்டுண்ணித் திறன் காரணமாக ஒட்டுண்ணுதல் அடைந்த கூட்டுப்புழுக்களை       இடமாற்றம் செய்யவும். ( அறிகுறி : பட்டுக்கூட்டில்  முட்டையிடும் போது ஏற்படும் துளைகள் ) 
 
                - கூட்டுப்புழுவின் வளர்ந்த ஒட்டுண்ணிகளின் வெளிபாட்டிற்காக ஒட்டுண்ணுதலடைந்த       கூட்டுப் புழுக்களை தனி ஜாடியில் வைக்கவும். 
 
               
              
                -  வெப்பநிலை 22 - 30℃  மற்றும் ஈரப்பதம் 45 - 80  சதவீதத்தில், ஓட்டுண்ணிகள் முட்டையிலிருந்து வெளியேற   12-20 நாட்கள் ஆகும். பின் ஓட்டுண்ணிகளை  கொள்கலனில் வைத்து விணியோகிக்கலாம்.
 
                            | 
           
         
          
               
  |