பயிர் பாதுகாப்பு :: தட்டைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பச்சைக் காய்த் துளைப்பான் : ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா

தாக்குதலின் அறிகுறிகள்

  • ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்
  • காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளே விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்
  • காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டைகள் : வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும்.
  • புழுக்கள் : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர் பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும் மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும்
  • தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல் நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும். பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
Cowpea
காயை உண்ணும் புழுக்கள்
Cowpea
சேதமடைந்த காய்

 

கட்டுப்பாடு
  • இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
  • எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
  • வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12  கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி  / லி.  என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
  • கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் /  தூவவும்
டைகுளோர்வாஸ் 625 மி.லி
குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி
கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி
மோனோகுரோட்டாபாஸ் 36 எஸ். எல் 625 மிலி
டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி /  எக்டர் இரண்டு முறை தெளிக்கவும்.
பாசலோன் 35 இ.சி 1.25 லி
(குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.)

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015