அறிகுறிகள் 
                  
              
                - விதையிலைகளில் நீர் ஊறிய  சிறிய புள்ளிகள்,  வட்ட வடிவமாக  (அ)  ஒழுங்கற்றதாக ஒன்றோடொன்று  இணைந்து காணப்படும்.  பின் காய்ந்து உதிர்ந்துவிடும்.  இளஞ்செடிகளில் புதிதாக தோன்றும்  இலைகளும் தாக்கப்பட்டு  காய்ந்து விடும்.  இது “நாற்று கருகல்”  எனப்படும்.
 
                - இலைகளின் அடிப்பாகத்தில் நீர்  ஊறிய சிறுபுள்ளிகள்  பழுப்பு நிறத்தில்  பின் கரு  நிறமாக மாறி,  மேலும் விரிவடையாமல்  சிறு சிறு  நரம்புகளுக்கிடையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கோண  வடிவத்தை கொண்டிருக்கும்.  நாளடைவில் மேற்புறத்திலும் புள்ளிகளை  காணலாம் (கோணப்புள்ளி).
 
                - நடுநரம்பு, கிளை நரம்புகள்  இவற்றின் இருபுறங்களிலும் நீர்க் கசிவு தோன்றி  நாளடைவில் கருநிறமாக  மாறிவிடும் (நரம்பு கருத்தல்)
 
                - தண்டு மற்றும் கிளைகளில்  கருப்பு நிற  காயங்கள் காணப்படும்.  இளம் இலைகள் உதிர்ந்துவிடும்  (கருங்கிளை)
 
                - இது காய்களையும் பாதிக்கிறது  (காய்கல்)
 
               
              மேலாண்மை  
              
                - அடர்த்தியான சல்பியூரிக் அமிலம்  100 மி.லி /  கிலோ விதை  கொண்டு பஞ்சு  நீக்கம் செய்யவும்.
 
                - பஞ்சு நீக்கிய விதைகளை  கார்பாக்சிம் (அ)  ஆக்சிகார்பாக்சின் 2 கிராம்  / கிலோ கொண்டு  விதை நேர்த்தி  (அ)  விதைகளை 1000பி.பி.எம்  ஸ்ரெப்டோமைசின்சல்பேட்டைஊற  வைக்கவும்.
 
                - தாவரக் குப்பைகளை அகற்றவும்.
 
            - தானாக வளர்ந்த பருத்தி  செடி மற்றும்  களைகளை நீக்கவும்.
   | 
            
             
                 
              
                
                    | 
                    | 
                 
                
                  | கோணப்புள்ளி | 
                  நரம்பு  கருத்தல் | 
                 
                
                    | 
                 
                
                  | காய்  அழுகல்  | 
                 
                              |