தயிர்ப்புள்ளி நோய்: ராமுலேரியா  ஏரியோலா 
                அறிகுறிகள் 
            
              - வளர்ந்து  வரும் செடிகளில் இந்நோய் ஏற்படுகிறது. 
 
              - ஒழுங்கற்ற,  கோணவடிவ, வெளிர்நீல நிறமுடைய புள்ளிகள் நரம்புகளுக்கிடையில், முதிர்ந்த இலைகளில் காணப்படுகின்றன.
 
              - நோய்  பாதித்தவுடன் இலைகள் மஞ்சள் நிறமாகவும், இறுதியில் பழுப்பு நிறமாகவும் மாறி இலைகள்  உதிர்ந்து விடுகின்றன.
 
              - ஈரப்பதம்  அதிகமான சூழலில் இந்நோய் ஏற்பட்டு பெருமளவு பாதிக்கிறது.
 
           
            கட்டுப்பாடு 
            
              - பாதிக்கப்பட்ட  செடிகளை அழிக்கவேண்டும்.
 
              - தொடர்ந்து  பருத்தி பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
 
              - கார்பன்டாசிம்  1 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில கலந்து தெளிக்கவேண்டும்.
 
              | 
              
              
              
                  | 
                  | 
               
              
                | நோயற்ற இலை | 
                காய்களில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள்  | 
               
              |