ஆந்தரக்னோஸ்: சாலிடோடிரைகம் காசிபியம் 
                அறிகுறிகள்  
            
              - இளம்  இலைகளில் சிறிய, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும்.
 
              - தண்டுப்பகுதியியல்  செடிகளில் ஏற்படும் காயங்களின் மூலம் தாக்கப்படுகின்றன. இதனால் செடிகள் நலிந்து காணப்படுகின்றன.
 
              - காய்களின்  எல்லா நிலைகளிலும் இந்நோய் ஏற்படுகின்றது.
 
              - இவ்வகை  பூசணம் காய்களின் பஞ்சு மற்றும் விதையைப் பாதிக்கிறது.
 
              - பிஞ்சுகள்  மஞ்சள் நிறத்திலும் அல்லது பழுப்பு நிறத்திலும் மாறுகின்றன. 
 
              - காய்களில்  பழுப்பு நிறத்தில் புள்ளிகளும், சற்று ஆழ்ந்த புள்ளிக்கும் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
 
              - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட விதைகள் முளைப்பதில்லை.
 
           
            கட்டுப்பாடு 
            
              - வயல்களில்  தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
 
              - நோயினால்  பாதிக்கப்பட்டசெடிகளை அழிக்கவேண்டும்.
 
              - கந்தக  அமிலத்தைப் பயன்படுத்தி விதைகளின் மேலுள்ள பஞ்சினை நீக்குவதால் இந்நோய் பரவுவது தவிர்க்கப்படுகிறது  அல்லது கேப்டான் அல்லது கார்பன்டாசிம் அல்லது பினோமைல் 3-4 கிராம் / கிலோ அளவில்  விதை நேர்த்தி செய்யலாம்.
 
              - கார்பன்டாசிம்  1 கிராம் / லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம்.
 
              | 
              
                
              
              
                  | 
                  | 
               
              
                | நோயற்ற இலை | 
                காய்களில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள்  | 
               
              |