| பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
     
        
          
            | அடித்தண்டழுகல் நோய்: கேனோடெர்மா லூசிடம் மற்றும் கேனோடெர்மா அப்பிளனேட்டம் | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                -  தஞ்சாவூர் வாடல் (கேனோடெர்மா வாடல்) நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.
 
                - அதைத்தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து, அது மேல்நோக்கி பரவும்.  கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும்.
 
                - சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி, தண்டின் அடிப்பகுதியும் அழுகிவிடும்.
 
                - மரப்பட்டை எளிதில் உடையக்கூடியதாக மாறி, அடிக்கடி செதில்களாக உரிந்து திறந்தவெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.  மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து, சிதைந்து, துர்நாற்றம் வீசும்.
 
                - தண்டின் அடிப்பகுதியில் அரைத்தட்டு காளான் வித்து தோன்றும்.  கடைசியில் மரம் மடிந்து விடும்.
 
                | 
           
          
            
              
                  | 
                  | 
                  | 
                  | 
                 
              
                | தண்டு கசிவு | 
                பறவைக் கண் நோய | 
                தொங்கிய இலைகள்  | 
                பூஞ்சானின்பெரிய பழம்தரும் அமைப்பு | 
                 
              | 
           
          
            கட்டுப்படுத்தும் முறை: 
              உழவியல் முறை:               
              
                
                  - நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி      அழித்து விட வேண்டும்
 
                  - பசுந்தாள் உரங்களை வளர்த்து தென்னை      பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.
 
                  - ஒரு      மரத்திற்கு, ஒரு வருடத்திற்கு மரத்தை      சுற்றி 4 அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த      வேண்டும்.
 
                 
               
              உயிரியல் முறை 
              
                
                  - சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (பிஎஃப் -1)      ஐ மரத்திற்கு 200 கி வீதம்,  200 கி  டிரைகோடெர்மா விரிடி உடன் சேர்த்து இடலாம்.
 
                  - 200 கி பாஸ்போபாக்டா், 200 கி அசோட்டோபாக்டர்      ஐ 50 கி.கி தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
 
                  - தொழு உரம் 50 கி.கி வேப்பம்புண்ணாக்கு      5 கி.கி வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை இடலாம்.
 
                 
               
              இரசாயன முறைகள் 
              
                
                  - தண்டின் சாறு கசியும் பகுதிகளை செதுக்கி       டிரைடிமார்ஃப் 5% கொண்டு பாதுகாக்கலாம்   அதைத் தொடர்ந்து சூடானதாரை      ஊற்றலாம்.
 
                  - ஆரியோபங்கின் 2 கி + காப்பர் சல்பேட்      1 கி + 100 மில்லி தண்ணீரில் கலந்து அல்லது 2 மில்லி டிரைடிமார்ஃப் + 100 மில்லி தண்ணீர் அல்லது 1 மில்லி ஹெக்சகோனசோல் + 100 மில்லி தண்ணீர் கலந்து      வேர் மூலம் செலுத்தலாம்  (பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள      வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்டவேண்டும்.  மருந்தை பாலித்தீன் பை அல்லது      பாலித்தீன் பாட்டிலில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும்.
 
                  - மரத்தை சுற்றி 1.5 மீட்டர் துாத்தில்      1% போர்டோ கலவையை 40 லி என்ற அளவில் ஊற்றி மண்ணை நனைக்க      வேண்டும்.
 
                 
              | 
           
               
  |