| பயிர் பாதுகாப்பு  :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
               சாம்பல் நிற வண்டு:   லுாக்கோஃபோலியோ கோனியோஃபோரா 
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இளம் தென்னங்கன்றுகளின் வேர்களில் துளையிட்டு நடுப்பகுதி முழுவதையும் தின்றுவிடுவதால் கன்றுகள் மஞ்சள்  நிறமடைந்துப் பின் காயத் தொடங்கும். 
 
     
  - வளர்ந்த மரங்களில் இவ்வண்டு தாக்குவதால் ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல்,  குரும்பை உதிர்தல். பூக்கும் பருவம் தள்ளிப்போதல், வளர்ச்சி மற்றும் மகசூல் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 
 
     
  - பாதிக்கப்பட்ட மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தால்  இவ்வண்டுகளைக் காண முடியும். 
 
     
  - இந்த வண்டினால் ஊடுபயிராக இடப்பட்டுள்ள கிழங்கு வகைகளும் தாக்கப்படுகின்றது.
 
           
பூச்சியை அடையாளம் காணுதல்: 
  
    
        | 
        | 
     
    
      | புழு | 
      வளர்ச்சியடைந்த வண்டு | 
     
  
 
  - முட்டை:  நீள்வட்ட வடிவில், இடப்பட்ட உடன் நல்ல துாய நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும்.  பொரிக்கும் தருணத்தில் சற்று மங்கலான வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். 
 
     
  - இளம் புழு: பல சுருக்கங்கள் மற்றும் சதைப்பற்றுடன் வளைந்து இருக்கும்.  துாய வெண்மை நிறத்துடன், பழுப்பு நிறத் தலையுடன் காணப்படும் 
 
     
  - வளர்ச்சியடைந்த வண்டு:  பழுப்பு நிற உடலில் நேரான இறக்கைகள் இருக்கும். இறக்கைகள் சிறியதாக வயிற்றை  சிறிதளவு மட்டுமே மறைத்தவாறு இருக்கும்.
 
         
              மேலாண்மை:  
                உழவியல் முறைகள்: 
              
                - கோடையின் முதல் மழைக்குப் பின் வாரத்திற்கொருமறை என 4-5 முறை நிலத்தினை உழுது விடவேண்டும்.  இதனால் வண்டு மற்றும் அதன் புழுக்கள் மேலெழுப்பப்படுவதால் பூச்சி உண்ணிகள் மற்றும் பறவைகளுக்கு உணவாகின்றன. 
 
 
                - தென்னந்தோப்பில் வேப்ப மரக் கிளைகள் இலைகளுடன் கூடியவற்றை நடுவதால் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். 
 
                 
                - பாதிக்கப்பட்ட தென்னையைச் சுற்றியுள்ள மண்ணை தோண்டிவிடுவதாலோ (அ) உழுவதாலோ (மழைக்குப் பின் அவ்வபோது) இப்பூச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
 
                 
                 
              இயந்திர முறை: 
              
                - ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் விளக்குப் பொறி (அ) தீப்பந்தம் வைப்பதால் கவர்ந்து கொல்லலாம்.
 
               
              
                இராசயன முறை:
                
 
              
                - மாலத்தியான் 5 D  என்ற வீதத்தில் பொடியை கன்றுகளை நடுவதற்கு முன்பு மண்ணில் துாவ வேண்டும்.  போரேட் 10 G - 100 கி/ மரம் (அ) 0.04% குளோர்பைரிஃபாஸ் கரைசலில் கன்றின் வேர்ப்பகுதியை நனைத்தபின் நடவேண்டும்.  இப்பொடியை மழை பெய்த உடன் ஏப்ரல்-மே மாதத்தில் 1 முறையும், மீண்டும் செப்டம்பரில் ஒரு முறையும் இட வேண்டும்.  பரிந்துரை:-  கேரள வேளாண் பல்கலைக்கழகம்.
 
               
              பிறமுறைகள்:  
              
                - வேம்பு, பெரு மரம், கருவேல், போன்ற மரக்கிளைகளை தோப்பில் நடுவதால் மழை பெய்யும் மாலை நேரங்களில் வண்டுகள் ஈர்க்கப்படும். இவற்றை சேகரித்து அழித்து விடவேண்டும். 
 
               
             
             
            
              | 
           
         
         
 |