நத்தைப் புழு:  பாரசா லெப்பிடா மற்றும் கான்த்தியெலா ரொட்டன்டா
              தாக்குதலின் அறிகுறிகள்:
              
                -                 இப்பூச்சியின் புழுக்களே ஓலையைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றது.   இளம் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சயத்தை சுரண்டி உண்ணும்.  இவை வளரும்போது ஓலையின் நடு நரம்புகள் மட்டுமே இருக்கும்.  இதனால் அதிகளவில் தாக்கப்பட்ட ஓலைகள் காய்ந்து விடும்.
                
 
              
              
                
                  
                      | 
                      | 
                    
                  
                    | அறிகுறி | 
                    பூச்சி | 
                    
                  
              
பூச்சியை அடையாளம் காணுதல்:
  - முட்டை: இதன் முட்டைகள் ஓலையின் அடிப் பரப்பில் தட்டையாக ஒட்டிக்கொண்டு பளப்பளப்பாகக் காணப்படும். 
     
  - இளம்புழு:  இளம்புழுவின் பச்சை நிற உடலில் வெள்ளை நிறக் கோடுகள் காணப்படுவதோடு,  நான்கு வரிசை சிறிய கறுப்பு நிற மயிர்க்கற்றைகள் காணப்படுகின்றன.  இவை தோலில் பட்டால் எரிச்சல் மட்டும் வலி ஏற்டுகிறது. 
     
  - கூட்டுப்புழு: நெருக்கமாக அமைந்த, அடர் பழுப்பு நிற பட்டுக் கூட்டினுள் காணப்படுகின்றன. (இக் (கக்கூன்கள்) இப்பட்டுப் போன்ற கூடுகள் மேற்பகுதி குவிந்தும் அடிப்பகுதி இலைப்பரப்பில் ஒட்டிக்கொள்ள ஏற்றவாறு தட்டையாகவும் இருக்கும்.  இக்கூடுகளைச் சுற்றிலும் அரிப்பை ஏற்படுத்தக் கூடிய மயிர்கள் அமைந்திருக்கும். 
     
  - முதிர்ந்த பூச்சி:  பட்டாம் பூச்சி போன்ற வளர்ந்த பூச்சியின் பச்சை நிற இறக்கைகளின் கீழ்புறம் அடர்ந்த நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன.
 
மேலாண்மை: 
  இரசாயன முறை:
  - தென்னைகளை நன்கு கவனித்து, வளராத இளம் புழுக்கள் இருப்பின் அவற்றை சேகரித்து அழித்து விட வேண்டும்,
     
  - கார்பரைல் 50 WP மருந்தினை 2 கி/லி அளவில் கலந்து தெளிக்கலாம். 
     
  - டைக்குளோர்வாஸ் 76 WSC மருந்தினை  2 மி.லி/லி தெளிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
   
  
இயந்திர முறை:
  - பொறி அமைத்தல்: விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.  ஒரு ஹெக்டருக்கு 5 பொறிகள் தேவைப்படும்.