| பயிர் பாதுகாப்பு  :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                 பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா  | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - முட்டையிலிருந்து வெளிவரும்      புழு இலையின் அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
 
                    -  தீவிர தாக்குதலின் போது செடியானது முழுவதுமாக அழிக்கப்படும்.
 
                   
பூச்சியின் அடையாளம்: 
                  
                    - முட்டை: பெண் அந்துப்பூச்சி இலைகளின் அடிப்புறத்தில் 50-100 முட்டையைக் குவில்களாக இடும்
 
                    - புழு:ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிறமுடிகள் காணப்படும்
 
                    - கூட்டுப்புழு:  உதிர்ந்த ரோமங்களைக் கொண்டு கூடுகட்டி அதனுல் இருக்கும்.
 
                    - அந்துப்பூச்சி:ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்
 
                   
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    - முட்டை      க்குவியலையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்
 
                    - வேப்பங்      கொட்டை சாறு 5 சதம் தெளித்து இளம் புழுக்களை அழிக்கலாம்
 
                    - குயினால்பாஸ்,      குளோர்பைரிபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து வளர்ச்சியடைந்த      புழுவை அழிக்கலாம்
 
                    | 
                 
            | 
           
         
         
 |