ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை டயாள்தி  
              அறிகுறிகள்:
              
                - இந்நோயின்  தாக்குதலினால் செடியின்  ஆரம்ப  காலத்திலே  இலைகளின்  நிறம்  மாறி  படிப்படியாக  இலைகளும்  செடியின்  தண்டுகளும்  வாடிக்  காணப்படும்.
 
                - பின்னர்  பாதிக்கப்பட்ட செடி  முழுவதும்  காய்ந்து  காணப்படும்.
 
                - முதிர்ந்த  செடிகளிலும்  இதே  போன்ற  அறிகுறிகள்  காணப்படும்.  ஆனால்  அதில்  இலைகள்  மஞ்சளாகி  பின்னர்  ஊதா  – சிவப்பு  நிறத்தில்  காணப்படும்.
 
                - பாதிக்கப்பட்ட  தண்டுகளின்  வாங்குலர் திசுக்கள் அடர்  பழுப்பு  நிறமாக்குகின்றன.
 
                - முதிர்ந்த  செடிகள்  இறப்பதற்கு  பல  மாதங்களுக்கு  முன்னதாகவே  காய்ந்து  அறிகுறிகளை  வெளிப்படுத்துகின்றன மற்றும்  வைக்கோல்  நிறத்திற்கு  மாறிவிடுகின்றன.
 
               
மேலாண்மை: 
              
                - நோயுற்ற செடியை உடனடியாக நீக்கிவிட வேண்டும். வேர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மண்  முழுவதையும் தோண்டி கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.
 
                - பாலியெத்திலின்  (0.1 மிமீ தடிமம்) மூலம் 30 நாட்களுக்கு மண்ணை வெப்ப மூட்ட வேண்டும்.
 
               Image Source: http://pnwhandbooks.org/plantdisease/carnation-dianthus-caryophyllus-fusarium-wilt | 
                
              
              
                  | 
               
              
                | செடி  வாடல் | 
               
              |