சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்       மலராத மொக்குகளையும் இலைத்திசுக்களையும் சாப்பிடும்.
 
                  - புழுக்கள் பூச்சரத்தினை துளையிட்ட       சாப்பிடும் அதனால் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து விடும்.
 
                  - பிஞ்சுகள் மற்றும் இளம் விதைகளையும்       சாப்பிட்டுக் காய்களை பொக்குகளாக மாற்றி விடுகின்றன.
 
                  - வளர்ந்த புழுக்கள் போலித்தண்டுகளை       துளையிட்ட அதன் மையப்பகுதியை சாப்பிடும். இதனல் நுனியில் உள்ள இலைகள் காய்ந்து       நடுக்குருத்து காய்தல் என்றத் தெளிவான அறிகுறியை ஏற்படுத்தும்.
 
                  - நடுக்குருத்து காய்தல் என்றத் தெளிவான       அறிகுறியை ஏற்படுத்தும். 
 
                  - புழுக்கள் குருத்துக்களை குடைந்து       தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளியிருக்கும்.
 
                  - இப்பூச்சியின் தாக்குதல் ஆண்டு       முழுவதும் இருக்கும். இருப்பினும் அதிகச் சேதாரம் டிசம்பர் - ஜனவரி, மார்ச்-ஏப்ரல்,       மே-ஜீன் மற்றும் செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் இருக்கும்.
 
                  - 
                    
                      
                          | 
                          | 
                          | 
                       
                      
                        | நடுக்குருத்து காய்தல்  | 
                        புழு | 
                        பூச்சி | 
                       
                     
                   
                 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - முட்டை: இளஞ்சிவப்பு, தட்டையான நீள்வட்ட       வடிவில் தனியாகவோ அல்லது குவியலாகவோ இளம் தளிர்களின் மீது இடும்.
 
                - புழு: இளஞ்சிவப்பு உடலையும், தலை மற்றும்       முன் மார்புக்கவசப் பகுதியும் பழுப்பு நிறத்திலும், உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும்       கொண்டிருக்கும்.
 
                - கூட்டுப்புழு: பட்டுக்கூட்டில் தண்டில் உள்ள இலைகளில்       இருக்கும்.
 
                - பூச்சி: அந்துப்பூச்சி சிறியதாக இருக்கும்.
 
                - மஞ்சள் நிற இறக்கையில் கருப்பு       புள்ளிகளுடன் காணப்படும்.
 
               
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                
                  - பகல் நேரங்களில் அந்துப்பூச்சி       இலையின் அடிப்பரப்பில் அமர்ந்திருக்கும் அவற்றை பூச்சி வலைக் கொண்டு சேகரித்து       அழிக்கவும்.
 
                  - நடுக்குருத்து காய்த்ல் அறிகுறி       உள்ள செடிகளை களைந்து அகற்றவேண்டும்.
 
                  - பூச்சியின் கழிவுப்பொருட்கள் வெளித்தள்ளியிருக்கும்       தூர்களைக் களைந்து அகற்றவேண்டும்.
 
                 
              |