பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழுப்புத் தத்துப் பூச்சி: செஸ்டியஸ் ஃபசிட்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் சிறுத்து விடும்
  • இலைக் காம்புகள் நீளம் குறைந்துவிடும்
  • அளவுக்கு அதிகமான இலைகள், செடியின் நுனிக்குருத்தில் தோன்றி வளர்ச்சிக்குன்றிய செடியாக தோற்றமளிக்கும்
  • மலர்கள் இலை போன்ற அமைப்பாக மாறிவிடும்
  • செடிகள் புதர் போன்று காட்சியளிக்கும்
  • காய்கள் காய்ப்பது அரிது
  • “சிற்றிலை (அ) சிறு இலை நோய்” என்னும் மைக்கோபிளாஸ்மா நோய்  கடத்திகளாக செயல்படுகின்றன

பூச்சியின் விபரம்:

  • பூச்சி: மிகச்சிறிய பழுப்பு நிற தத்திச் செல்லும் பூச்சிகள்

கட்டுப்படுத்தும் முறை:

  • நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும்
  • நடவுக்கு முன்பு 0.2 சதம் கார்போஃபீரான் 50 STD கைரசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்து நடவு செய்யவேண்டும்.
  • டைமீதோயேட் 0.3 சதம் தெளிக்கவேண்டும்

 

இலைகள் சிறுத்தல்
பூச்சி இலைகள் சிறுத்தல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016