பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
ஹட்டா / புள்ளி வண்டு : ஹீனோஸ் எபிலாக்னா விஐிங்டியக்டோப்பங்டேட்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகளின் பச்சையம் சுரண்டப்பட்டு சல்லடை போல் இருக்கும்
  • செடிகளில் வீரியம் குன்றி, நாளடைவில் காய்ந்து கருகி உதிர்ந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: மஞ்சள் நிறத்தில், சுருட்டு வடிவில் இருக்கும்
  • வண்டின் புழு: மஞ்சள் நிறத்தில் தட்டைவடிவில் இருக்கும். உடலின் மீது 6 வரிசையில் கரிய நிறத்தில் முள்போன்ற கிளைத்த ரோமங்களைக் கொண்டிருக்கும்.
  • கூட்டுப்புழு: மஞ்சள் நிறத்தில் இருக்கும். தலைப்பாகத்தில் முட்கள் இருக்காது. வால்பாகத்தில் முட்கள் இருக்கும்.
  • பூச்சி:அரை கோள வடிவில் பாதி பட்டாணிப் பருப்பு போல் மங்கலான பழுப்பு நிற இருக்கைகளின் மீது 14 கரும் புள்ளிகள் இருக்கும்

 

இலைகள் சல்லடை போல் மாறுதல் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • இலைகளில் உள்ள வண்டினப்புழுக்களையும், முட்டை கூடுகளையும் சேகரித்து அழிக்கவும்
  • செடிகளை உழுக்கி, வண்டினப்புழுக்கள், கூட்டுப்புழு மற்றும் பூச்சிகளை கீழே விழச்செய்து அழிக்கவும்
  • பின்வரும் ஏதேனும் ஓரு பூச்சிக்கொல்லியை நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்கார்பரில் 3 கிராம்/லிட்டர் பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016