மஞ்சள் தேமல் நோய் நச்சுயிரி நோய் 
              
                
                  நோயின் அறிகுறிகள் 
                    
                      - நோயின் முதல் அறிகுறியாக இளம் இலைகளின் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும்.
 
                      - பின்னர் இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்து பகுதிகள் தோன்றும்.
 
                      - சிலசமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் காணப்படும்.
 
                      - நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகி கொண்டே வந்து சில துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும்.
 
                      - நோயுற்ற செடிகள் தாமதமாகி காய்ப்பிற்கு வருவதுடன் குறைந்த எண்ணிக்கையில் காய்க்கும் சில சமயங்களில் காய்களும், விதைகளும் மஞ்சளாக மாறிவிடும்.
 
                      - செடிகளின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் முழு மகசூல் இழப்பு ஏற்படும்.
 
                      
                     
                    பரவுதல் 
                    
                      - பெமிசியா டபாசி வெள்ளை ஈயினால் இந்நோய் பரவுகிறது 
 
                      
                      | 
                   
                     | 
                 
                |