| 
             இலைத்துரு நோய் 
            
            நோய் காரணி யூரோமைசிஸ் பிசியோலி டிபிக்கா என்கின்ற பூஞ்சாணத்தினால் தோற்றுவிக்கப்டுகிறது. 
              
                
                  நோயின் அறிகுறிகள்  
                    
                      - பயிரின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் அதிகமாக அளவு இழப்பு ஏற்படுகிறது.
 
                      - நோய் தொற்றிய 8 முதல் 10 நாட்களுக்குள் இலைகளின் அடிப்பாகத்திலும், மேல் பாகத்திலும் ஆரஞ்சு கலந்த துகுப்புள்ளிகளைக் காணலாம்.
 
                      - துருப்புள்ளிகள் நோய் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் செம்பழுப்பு யுரிடோகளைத் தோற்றுவிக்கும்.  
 
                      - பாதிக்கப்ட்ட இலைகள் சுருண்டு விடும்.
 
                      - நோய் தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்து விடுவதால் காய்ப்பு மிகவம் குறைந்து விடுகிறது.
 
                     
                    பரவுதல் 
                    
                      - பூஞ்சான் வித்துகள் காற்றின் மூலம் பரவக்கூடியது.
 
                     
                    
                    தடுப்புமுறைகள் 
                    
                      - எக்டர் ஒன்றுக்கு மான்கோசப் - 1000 கிராம் அல்லது நனையும் கந்தகம் - 2500 கிராம் தெளித்தல்
 
                     
                    
                     | 
                                        | 
                 
               
             |