இலை சுருள்வு நோய்: இலை சுருள்வு  நச்சுயிரி  
              
                
                  அறிகுறிகள் 
                      - மிகச்சிறிய  இளம் இலைகளில் பச்சைசோகை நரம்புகள், மற்றும் இலைகளின் விளிம்புகளிலும் தோன்றும்.
 
                      - இலைகள்  விளிம்பிலிருந்து கீழ்நோக்கி சுருளும்.
 
                      - சில  இலைகள் முறுக்கிக் காணப்படும்.
 
                      - இலையின்  அடிப்பரப்பில் உள்ள நரம்புகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிற மாற்றம் காணப்படும்.
 
                      - விதைத்து  5 வாரம் கழிவதற்குள் பயிர்களில் அறிகுறிகள் தோன்றும். செடிகள் குட்டை வளர்ச்சியுடன்  காணப்படும். பெரும்பாலான பயிர்களில் நுனியில் காய்வதால் நோய் ஆரம்பித்து ஒருவாரம்  (அ) 2 வாரத்திற்குள் மடிந்து விடும்.
 
                      - பயிரின்  கடைசி காலத்தில் தாக்கப்படும் பயிர்களில் இலைகள் சுருண்டோ, முறுக்கியோ காணப்படாது.  ஆனால் நரம்புகளில் தெளிவான பச்சைசோகை காணப்படும்.
 
                      - நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை 45 நாட்களுக்குள் நீக்கலாம்.
 
                      - அசிபேட் 1கி/லி (அ) டைமிதோயேட் 2 மிலி/லி தெளிக்க வேண்டும்.
 
                      | 
                                                              | 
                 
                |