மஞ்சள்சோகை: உளுந்து  மஞ்சள்சோகை நச்சுயிரி 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - பொதுவாக  உளுந்து பயிரில் இந்த நோய் அதிகமாக தோன்றும்.
 
                      - இளம்  இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றும்.
 
                      - புதிதாக  தோன்றும் இலைகளில் ஒழுங்கற்ற மஞ்சள் மற்றும் பச்சைத் திட்டுக்கள் மாறி மாறி காணப்படும்.
 
                      - புள்ளிகள்  அளவு அதிகரித்து, முடிவில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
 
                      - நோய்  தாக்கப்பட்ட இலைகளில் நிறமிழந்து காணப்படும்.
 
                      - பயிர்கள்  குட்டை வளர்ச்சியுடன், காலந்தாழ்த்தி முதிர்ச்சி அடைதல், மிகக்குறைந்த அளவு பூக்கள்  மற்றும் காய்களை உற்பத்தி செய்தல்.
 
                      - நோய்  தாக்கப்பட்ட செடிகளில் காய்களின் அளவு குறைந்து, மஞ்சள் நிறமாக மாறும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - நோய்  எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாக்கக் கூடிய   இரகங்களான வம்பன்4, வம்பன் 5 பயிரிடுதல் 
 
                      - வரப்போர  பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தைப் பயிரிடுதல் 
 
                      - இமிடாகுலோபிரிட்  70 WS 5 மிலி/கிலோ என்ற அளவில் விதைகளை நேர்த்தி செய்தல்.
 
                      - உளுந்து  மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும்.
 
                      - டைமெத்தோயேட்  750 மிலி/ஹெக்டர்  என்ற அளவில் விதைத்து 30 நாள் கழித்து தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்.
 
                      | 
                   
                     | 
                 
                |