வேர் அழுகல் மற்றும் இலை கருகல்: ரைசக்டோனியா சொலானி  
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - விதை  அழுகல், வேர் அழுகல், நாற்றழுகல், நாற்று கருகல், தண்டு சொறி, இலை கருகல் ஆகியவை தோன்றும்.
 
                      - பொதுவாக  காய் பிடிக்கும் நிலையில் இந்த நோய் தோன்றும்.
 
                      - நோயின்  ஆரம்ப நிலையில், விதை அழுகல் , நாற்று கருகல், வேர் அழுகல் அறிகுறிகள் தோன்றும்.
 
                      - தாக்கப்பட்ட  இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.இலைகளில் ஒழுங்கற்ற பழுப்புற்ற புள்ளிகள் தோன்றும்.
 
                      - இந்த  புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய கருகல் தோன்றி, இலைகள் வளர்வதற்கு முன்பே உதிர்ந்து  விடும்.
 
                      - வேர்  மற்றும் தண்டின் அடிப்பகுதி கருப்பு நிறமாக மாறும். பட்டைகள் எளிதாக உரியும்.
 
                      - பாதிக்கப்பட்ட  பயிர்கள் வாட ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட பயிரின் ஆணி வேரை பிரித்துப் பார்த்தால், உள்ளே  உள்ள திசுக்கள் சிவப்பு நிறமாக உள்ளது தெரியும்.
 
                      - மண்  மூலம் பரவும்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - டிரைக்கோடெர்மா  விரிடியுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                      | 
                    
                   
  | 
                 
                |