செர்கோஸ்போரா இலைப்புள்ளி: செர்கோஸ்போரா  லக்னேகஸன்ஸ்  
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - சிறிய,  எண்ணற்ற புள்ளிகள் நடுவில் பழுப்பு நிறத்திலும், சிவப்பு கலந்த பழுப்பு நிற விளிம்புடன்  காணப்படும்.
 
                      - இதே  போல புள்ளிகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும்.
 
                      - சாதகமான  சூழ்நிலையில், புள்ளிகள் அதிகமாகி, பூக்கும் சமயம் மற்றும் காய் உருவாகும் சமயத்தில்  இலைகள் உதிரும்.
 
                      - பூஞ்சாண்  விதை மூலம் பரவும், பயிரின் குப்பைகளில் உயிர் வாழும்.
 
                      - அதிக  ஈரப்பதம் இந்த நோய் உருவாக சாதகமாகிறது.
 
                     
                    கட்டுப்பாடு  
                    
                      - உயரமாக  வளரக் கூடிய தானியங்கள் மற்றும் சிறு தானியங்களுடன் ஊடுபயிர் செய்தல்
 
                      - சாகுபடி  முறையை சரியாக பின்பற்றுதல்
 
                      - நோயற்ற  விதைகளை பயன்படுத்துதல்
 
                      - குறைந்த  பயிர் எண்ணிக்கை மற்றும் அதிக இடைவெளி விட்டு பயிரிடவேண்டும்.
 
                      - நிலப்போர்வை  செய்வதால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
 
                      - கார்பன்டசிம்  0.5கிராம் /  லிட்டர் (அ) மான்கோசெப் 2 கிராம் /லிட்டர் என்ற அளவில் விதைத்து 30 நாட்கள் கழித்து  தெளிக்க வேண்டும்.
 
                      | 
                                        | 
                 
                |