| பயிர் பாதுகாப்பு  :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  புல் நீல் வண்ணத்துப்பூச்சி : யூகிரைசாப்ஸ் னிஜஸஸ்  | 
                 
              
                
                  
                      | 
                    அறிகுறிகள்:
                      
  - மொட்டுக்கள்,       பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்
 
                        - காய்களில்       புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும்.
 
                   
                      பூச்சியின்  விபரம்: 
                      
                        - புழுக்கள் : மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு       நிற வரியுடன், சிறிய கருப்புநிற ரோமங்கள் உடலின் மீது இருக்கும்.
 
                       
                      
                        - தாய்ப்பூச்சி       : நீல நிறத்தில் , அளவான வடிவில், 5 கருப்பு       நிற புள்ளிகள் பின்னிறக்கையிலம், 2 கருப்பு நிறபுள்ளிகள் உள்விளம்பிலும் காணப்படும்.
 
                        | 
                   
                  | 
               
              
                 கட்டுப்பாடு:  
                  
                    - இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12  என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
 
                    - எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற  எண்ணிக்கையில் அமைக்கவும்.
 
                    - வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
 
                    - பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு  1.5 X 10 12  கிருமிகள் மற்றும்  ஒட்டும் திரவம் 1.0 மி லி  / லி.  என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
 
                    - கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும்  ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் / தூவவும்.
                      
                        - டைகுளோர்வாஸ் 625 மி.லி.
 
                        - குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி.
 
                        - கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி.
 
                        - டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின்  வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி /  எக்டர்  இரண்டு முறை தெளிக்கவும். 
 
                        - பாசலோன் 35 இ.சி 1.25 லி.
 
                       
                     
                   
                  (குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை  மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.) 
                  
                    - 10 % பொருளாதார       சேதநிலையை அடையும்போது கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ளலாம்.
 
                    - ஆழமான       கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
 
                    | 
               
          | 
           
         
  |