| பயிர் பாதுகாப்பு  :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
    | முள்ளு  காய்த் துளைப்பான் : ஈட்டியெல்லா ஜிங்கினெல்லா | 
   
              
                அறிகுறிகள்:  
                  
                    - பூக்கள்       மற்றும் இளம் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்
 
                    - முதிர்ந்த       காய்களில் புழு நுழைந்த இடத்தில் பழுப்பு நிறம் புள்ளியுடன் காணப்படும்
 
                   
                  பூச்சியின்  விபரம்: 
                  
                    - புழுக்கள் : ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும், பின் ரோஸ் நிறத்திலும் மாறும்
 
                    - முன் மார்புக் கண்டத்தில் 5 கருப்பு புள்ளிகள் காணப்படும்.
 
                    - தாய்ப்பூச்சி : பழுப்புகலந்த  சாம்பல் நிறத்தில் இருக்கும். முன் மார்புகண்டம் - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன்னிறைக்கையில் வெள்ளை நிற வரிகள் முன் புற விளிம்பு வரை இருக்கும்.
 
                    | 
                 
              
                 | 
               
              
                கட்டுப்பாடு: 
                  
                    
                      - நன்மை தரும் பூச்சிகளான டேற்றாஸ்டைகஸ் வகைகளை, ப்ரெகான்ஹெபெடோர், பநேரோடோமா வகைகளை மற்றும் பிஹென்தேகாசிசெல்லா போன்றவற்றை பாதுகாக்க வேண்டும்.
 
                      - பொருளாதார சேதநிலையை : 10 % பாதிக்கப்பட்ட பகுதிகள் 
 
                      - ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும். 
 
                      - ஆரம்ப விதைப்பு, குறுகிய கால ரகம்.
 
                      - நெருக்கமான பயிர் இடைவெளியை தவிர்க்க வேண்டும். 
 
                      - உயரமான சோளத்தை பறவை குடிலாக வளர்க்கவும். 
 
                      - வளர்ந்த புழுக்கள் மற்றும் தாய்ப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
 
                      - மயக்கப்பொறியை 50மீ இடைவெளியில் 5 பொறி / ஹெக்டர் என வைக்க வேண்டும் 
 
                      - எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
 
                      - அந்துப்பூச்சியை அழிக்க விளக்குப் பொறிகளை (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) அமைக்க வேண்டும் 
 
                      - டிரைகோகிரம்மா ச்லிஒனிச் 1.5 லட்சம் / எக்டர் / வாரத்திற்க்கு 4 முறை வெளியிடுவதன் மூலம் கட்டுபாட்டை பெறலாம் . 
 
                      - பச்சை கண்ணாடி இறக்கை நாவாய்ப் பூச்சி ,  வேட்டையாடும் கெட்ட நாற்றம் உள்ள நாவாய்ப் பூச்சி, சிலந்தி ,  எறும்புகள் போன்றவற்றை சேமிக்கவும் .
 
                      - டீபால் 0.1% உடன் என் .பி . வி 250 எல் இ /  ஹெக்டர் மற்றும் வெல்லம் 0.5% ஐ,10-15 நாட்கள் இடைவெளியில் , 3 முறை இட  வேண்டும் (பூச்சிக்கொல்லி /ஹெக்டர் என் பி வி ஐ புழுக்கள் ஆரம்ப நிலையில்  இருக்கும்போது தெளிக்க வேண்டும் )
 
                      - பிடி 600 கிராம், வேப்ப எண்ணெய் / புங்க எண்ணெய் 80 இசி @ 2 மி.லி / லிட்டர் 
 
                      - வேப்பங் கொட்டை சாறு 5% இருமுறை தெளித்து தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
 
                      - குயினால்பாஸ் 4டி அல்லது கார்பரில் 5டி ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியை 25 கிலோ /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
 
                      - குயினால்பாஸ் பூச்சிக்கொல்லியை 25 இ சி @ 1000 மி லி /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
 
                       
                    | 
                 
              | 
           
         
  |