| பயிர் பாதுகாப்பு  :: உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  பச்சைக்  காய்த் துளைப்பான் : ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா | 
                 
              
                அறிகுறிகள்: 
                  
                    - ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்
 
                    - காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளே விட்டு,  உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்
 
                    -  காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும்
                      
                      
 
                     
                  பூச்சியின்  விபரம்: 
                  
                    - முட்டைகள் :  வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும்.
 
                    - புழுக்கள்  : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர்  பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும்  மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்
 
                    - கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும் 
 
                    - தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல்  நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும். 
                      பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான  கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
 
                    | 
                 
              
                
                  
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | முட்டை  | 
                    புழு  | 
                    கூட்டுப்புழு  | 
                    தாய்ப்பூச்சி  | 
                   
                  | 
               
              
                கட்டுப்பாடு: 
                  
                    - இனக்கவர்ச்சிப்  பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
 
                    - எக்டருக்கு  50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும். 
 
                    - வளர்ந்த  புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
 
                    - பச்சைக்  காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12  கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி  / லி.  என்ற  விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
 
                    - கீழ்கண்ட  பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்கவும் /  தூவவும்.
                      
                        - டைகுளோர்வாஸ்  625 மி.லி
 
                        - குயினால்பாஸ்  4 சதத்தூள் 25 கி.கி
 
                        - கார்பரில்  5 சதத்தூள் 25 கி.கி
 
                        - டிரைஅசோபாஸ்  750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி /  எக்டர் இரண்டு முறை தெளிக்கவும். 
 
                        - பாசலோன்  35 இ.சி 1.25 லி
 
                       
                     
                   
                  (குறிப்பு:  புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு  நச்சுயிரி தெளிக்கவும்.)  | 
               
              | 
           
       
  |