| பயிர் பாதுகாப்பு  :: கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  வெட்டுப்புழு :  அக்ரோடிஸ் இப்ஸிலான் | 
                 
                
                  
                    
                      அறிகுறிகள் 
                        
                          - புழுக்கள்  2-4 இன்ச் ஆழத்தில் மண்ணில் இருக்கும்
 
                          - புழுக்கள்  இளம் செடிகளின் அடிப்புறம், கிளைகள் அல்லது வளரும் செடிகளின் தண்டுகளை வெட்டும்.
 
                          - வெட்டிய  செடிப்பகுதிகளை மண்ணுக்குள் எடுத்துச் சென்று உண்ணும்.
 
                          - புதைந்துள்ள  தண்டு அல்லது கிளைகள் கண்டிப்பாகி புழுக்கள் மறைவதற்கான இடமாக இருக்கும்.
 
                           
                        பூச்சியின் விபரம்  
                        
                          - முட்டைகள்  – மண்கட்டிகள், தண்டின் அடிப்பாகம், இலையின் இரண்டு பக்கமும் காணப்படும்.
 
                          - புழுக்கள்  – அடர் பழுப்பு நிறத்துடன் சிவப்பு நிற தலையுடன் காணப்படும் 
 
                          - கூட்டுப்புழு  – மண் கூட்டுக்குள் வளரும்
 
                          - தாய்ப்பூச்சி  – பழுப்பு நிறத்தில், எண்ணற்ற அலை வரிகள் மற்றும் புள்ளிகளுடன் 3 – 5 செ.மீ அளவுக்கு  இறக்கைகளின் குறுக்கே காணப்படும்.
 
                           
                        கட்டுப்பாடு 
                        
                          - ஆழமான  வெயில் உழவு செய்ய வேண்டும்.
 
                          - நன்கு  மட்கிய அங்கக உரங்களை பயன்படுத்த வேண்டும்.
 
                          - பயிர்  சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்.
 
                          - அக்டோபரின்  கடைசி வாரத்தில் பருவத்துக்கு முன்னரே விதைக்க வேண்டும்.
 
                          - கோதுமை  அல்லது பின் விதை அல்லது கடுகு பயிருடன் இடைப்பயிரிட வேண்டும்.
 
                          - ஆரம்பகாலத்  தாக்குதலின் போது பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும். 
 
                          - தக்காளி  அல்லது வெண்டைச் செடியை வயலின் அருகில் பயிரிடக் கூடாது.
 
                          - துலுக்கமல்லி  செடியை வரப்பு ஓரங்களில் பயிரிட வேண்டும்.
 
                          - விளக்குப்  பொறிகளை அமைத்து தாய்ப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 
                          - குயினல்பாஸ் 25 இ.சி 1000 மி.லி /  எக்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
 
                          - அதிகத்  தாக்குதலின் போது, ஸ்பார்க் 36 இ.சி 1000 மிலி / எக்டர் அல்லது ப்ரோபெனோபாஸ் 50  இ.சி 1500 மிலி /  எக்டர் என்ற அளவில் 500  – 600 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
 
                          | 
                        | 
                     
                    
                        | 
                     
                    
                      |   | 
                     
                     
                    
 | 
                 
                | 
           
                 
  |