தண்டு கூன் வண்டு: ஒடாய்போரஸ்  லாங்கிகோலிஸ்  
சேதத்தின் அறிகுறி : 
              
                
                  - இவ்வண்டு 5வது மாத வாழை மரங்களிலிருந்தே தாக்கத் தொடங்கும். கன்றுகளை இது தாக்குவதில்லை.
 
                  - தண்டின் மீது  சிறிய குண்டூசி அளவு துளைகளை ஏற்படுத்துகிறது.
 
                  - இத்துளையிலிருந்து பழுப்பு நிற பிசுபிசுப்பான பிசின் போன்ற திரவம் வெளிவந்து கொண்டிருக்கும். இலையுறையின் அடிப்பகுதியிலிருந்து நார் போன்ற கழிவுகள் வெளிப்படும்.
 
                  - புழுக்கள் தண்டுப்பகுதியை குடைந்து சென்று திசுக்களை உண்ணுகின்றன. பாதிக்கப்பட்ட தண்டினை பிளந்து பார்த்தால் திசுக்கள் நீண்ட அளவில் குடைந்து காணப்படும்.
 
                  - இவ்வண்டுகளின் அதிகளவு தாக்குதலால் தண்டுப் பகுதி அழுகி, துர்நாற்றம் வீசும்.
 
                  - இதன் தாக்குதலால் பூ வெளிவருவது மற்றும் காய்கள் முதிர்ச்சியடைவது தடைபட்டு, மகசூல் இழப்பு அதிகளவில் ஏற்படுகின்றது.
 
                  - இத்தகைய மரங்களிலிருந்து பெரும்பாலும் குலைகள் தோன்றுவது இல்லை. ஒரு வேளை தோன்றினாலும் குலைகள் சிறுத்தும், காய்கள் சிறுத்து எண்ணிக்கையில் குறைந்தும் காணப்படும்.
 
                  
                 
               
              
                  
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | தண்டில் சிறிய குண்டூசி வடிவ துளைகள் | 
                    தண்டிலிருந்து கருமை நிற கழிவுகள் வெளிவரும் | 
                    பசை போன்ற திரவம் காணப்படும் | 
                    தண்டில் துளைகள் காணப்படும் | 
                   
               
                பூச்சியின் விபரம் 
              
                
                  - முட்டை : முட்டைகள் உருளை வடிவில் வெண்மை நிறத்தில் தட்டையான நுனிப்பாகத்தைக் கொன்டிருக்கும். இதன் அடைகாப்புப் பருவம் 3லிருந்து 8 நாட்கள்.
 
                  - புழு : புழுவானது சதைப்பற்றுடன், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், கால்களற்றுக் காணப்படும். இவை தண்டுகளைத் துளைத்துக் குடைந்து கொண்டே சென்று நடுத்தண்டைத் தாக்குகின்றது.
 
                  - கூட்டுப் புழு : தண்டினுள்ளேயே, இவை நார்போன்ற கூடை கட்டி கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இவை இக்கூட்டுக்குள்ளேயே வளர்கின்றன.
 
                  - முதிர்ந்த வண்டு : முதிர்ச்சியடைந்த கூன் வண்டானது கருமை நிறத்தில் 23-39 மி.மீ. அளவு இருக்கும். இவை தண்டின் அழுகிய பாகங்களுக்குள் காணப்படும். இவ்வண்டுகள் 1 வருடம் வரை வாழ்கின்றன.
 
                 
                
                  
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | முட்டை | 
                    புழு | 
                    கூட்டுப் புழு | 
                    முதிர்ந்த வண்டு | 
                   
                 
               
              கட்டுப்படுத்தும் முறை 
              
                
                  -  அவ்வப்போது காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தி,  நிலத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் 
 
                  - ஒவ்வொரு மாதமும் பக்க கன்றுகளை நிக்கவும் 
 
                  - பாதிக்கப்பட்ட பகுதிகளை வேரோடு பிடுங்கி அழித்து விட வேண்டும். 
 
                  - அறுவடை முடிந்த பின் தண்டுகளை பிடுங்கி அழித்தபின், கையோடு குலையினை நீக்கி விட்டு, இதன் மூலம் அதில் மற்ற வண்டுகள் பெருகுவதை தவிர்க்கலாம்.
 
                  - வண்டுகள் அதிகம் காணப்படும் இடங்களில் மட்டாக்கி எனும் அறுவடைக்குப் பின் இலைகளை உரமாக வயலில் இடும் முறையினை தவிர்க்கலாம். 
 
                  - குழி ஒன்றுக்கு நடவு சமயத்தில், பியூராடான் 3 G 20 கி அல்லது திம்மெட் 10 G - 12 கி அல்லது வேப்பம் புண்ணாக்கு ½ கிகி என்ற அளவில் இடவும்.
 
                  - வெட்டப்பட்ட இலைக்காம்பினை குளோர்பைரிபாஸ் (2.5 லி/லி)+ 1 மி.லி ஒட்டுந் திரவத்தில் கலந்த கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
 
                  - வாழைக் குலையினை அறுவடை செய்த பின்பு, வாழை மரத்தினை வெட்டிய அடிப்பகுதியில் 100 மி.லி கார்பரைல் (2 கி/லி) அல்லது பிவேரியா பேரியானா 10 கி என்ற அளவில் மருந்தினை இடவும்.
 
                  - வெட்டப்பட்ட (நீளவாக்கில்) பகுதியின் மீது 20 கி. பிவேரியா பேசியானா பூஞ்சை அல்லது ஹெப்பிடிரோ ரேப்டிடிஸ் இன்டிகா எனும் நூற்புழுவினை கொண்டு தடவவேண்டும்.
 
                  - இக்கூண்வண்டுகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடும்.
 
                  - நீளவாக்கில் பிளக்கப்பட்ட தண்டு பொறிக்கப்படும். இப்பொறியானது (45 செ,மீ நீளம்) வாழையின் தண்டினை இரண்டாக நீளவாக்கில் பிளந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய பொறிகள் வயலில் ஆங்காங்கு ஏக்கருக்கு 25 என்ற வீதத்தில் வைத்து இக்கூன் வண்டுகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
                 
               
               |