| பயிர் பாதுகாப்பு ::  வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                பறவைக் கண் நோய்: கிளியோஸ்போரியம் முசேரம்  | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                                        - ஆரம்பகட்டத்தில், சிறிய, வட்ட, கருப்புபுள்ளிகள்பழங்களில் தோன்றுகிறது. பின்னர் இந்தபுள்ளிகளின் அளவு அதிகரித்து பழுப்புநிறத்திற்கு மாறும். பழத்தின்தோலானது கருப்பு நிறத்தில் மாறும் மற்றும் இளஞ்சிவப்பு ந்றத்தில்  மூடப்பட்டிருக்கும். இறுதியாக தார் முழுவதுமாக  இந்நோய் பரவி மொத்தமாக பாதிக்கிறது.
 
                    - இதன் தாக்கத்தால் வாழைப்பழங்கல் முன்கூட்டிய பழுத்தும் மற்றும் சுருங்கியும் பழங்களின் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் வித்துக்கள் காணப்படும்
 
                    - வாழைப்பழத்தின் காம்புப்பகுதியில் கருப்பு புண்கள் ஏற்படுவதும் வாழைப்பழங்கள் தளர்ந்தும் காணப்படும்
 
                    - சில நேரங்களில் முக்கிய கொத்து தண்டு நோயுற்ற காணப்படும். தாக்கப்பட்டபழங்கள் கருப்பு நிறத்தில் மற்றும் அழுகியும் காணப்படும். முதிர்ச்சியடையாத பழங்களில் பழுப்பு நிற வட்டுகள். பழங்களில் கருப்பு நிறம் மற்றும் சுருக்கம். முழுதாரும் கருப்பு நிறத்தில் மாற்றம்
 
                  | 
               
              
                
                  
                    |   | 
                      | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |   | 
                    பழுப்புநிற புள்ளிகள் | 
                      | 
                       | 
                      | 
                      | 
                   
                  | 
               
              
                நோய்க்காரணி:
                  
                    - இவை பொதுவாக வட்டமானது அல்லது சிலநேரங்களில்நீண்டது.
 
                    
                    - நோயானது காற்றில் பூசணஇழைகள் மூலமாகவும் அடிக்கடி வாழைபூக்களுக்கு வரும் பல பூச்சிகள் மூலம்  பரவுகிறது.
 
                    - உயர் வளிமண்டல வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்  ஆகியவை நோய் பரவ சாதகமாகவே உள்ளது. 
 
                    | 
                
               
             
              
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                    உழவியல் முறை:  
                    
                      - அறுவடை மற்றும் பெற்று அனுப்பும் போதும் பழங்களில் சேதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
 
                      - பாதிக்கப்பட்ட பகுதிகளை எரித்து அழிக்கவேண்டும்.
 
                      - முறையாக பராமறிக்க வேண்டும்.
 
                      - நிலத்தில் களைகளை அழித்தும், நல்லவடிகால் வசதி அமைத்தும் பராமறிக்க வேண்டும். 
 
                      - அறுவடை மற்றும் பெற்று அனுப்பும் போதும், சேமிக்கும்போதும் பழங்களை முடிந்தவரை தொற்றுஇருந்து பாதுகாத்தும். 
 
                      - தார்களை முதிர்ந்த சரியான தருணத்தில் அறுவடை செய்யவேண்டும் .
 
                      - சரியான உரமிடுதல் மூலமும் தொற்றை தடுக்கலாம். 
 
                     
                    இயந்திரவியல் முறை  
                     
                    
                      - தொற்று ஏற்ப்பட்ட சேய்மை அரும்புகளை நீக்கப்படுவதன் மூலம் மற்றவைகளை தொற்றிலிருந்து தடுக்கப்படுகிறது.
 
                      - அறுவடைக்குபின், தார்களில் எந்த தொற்றும்  இல்லாதவைகளை 7 °-10°  செல்சியஸில் கவனமாக சேமித்து வைக்கவேண்டும்.
 
                     
                     
                    
                    
                      
                   | 
                 
                
                          | 
           
         
  |