| பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             தீக்குருகல் நோய்: எர்வினியா  அமிலோவோரா 
              
              
            அறிகுறிகள்: 
            
              
                - ஆரம்பத்தில்       அறிகுறிகள் இலையின் மேல் தோன்றும். பின் இலையின் மேல் நீர் கோத்தது போன்று       தோன்றி, காய்ந்து பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடும்       அல்லது மரத்திலேலே காய்ந்து தொங்கி காணப்படும்.
 
                - பின்       இந்த அறிகுறிகள் கொம்புகளில் தோன்றும். ஆனைக் கொம்புகளின் நுனிகள் முதலில்       காயத் தொடங்கி, கீழ் பகுதி வரை காய்ந்துவிடும். அது கிளைகள் வரை பரவி காணப்படும்.
 
                - பழங்களில்       நீர் கோத்தது போன்று தோன்றி, பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து, இறுதியில் கருப்பு       நிறமாக மாறிவிடும். 
 
                - பாதிக்கப்பட்ட       பகுதிகளில் இருந்து கசிவு ஏற்படும்.
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - தாக்கப்பட்ட       பகுதிகளை எடுத்து அகற்றவும்
 
                - கருகிய       கொம்புகளை அகற்றவும்
 
                - 500       பிபிஎம் ஸ்டெப்ரோமைசினை தெளிக்கவும்
 
               
             
 | 
             
               
             
               | 
           
          |