வங்கி மற்றும் கடன் :: வங்கி -  ஒரு கண்ணோட்டம்
பகுதி -1

இந்தியாவில் பொது வங்கி 1786 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் வங்கி மற்றும் பெங்கால் வங்கி தொடங்கப்பட்டது. கிழக்கு இந்திய நிறுவனம், பெங்கால் வங்கி (1809), பாம்பே வங்கி (1840) மற்றும் மெட்ராஸ் வங்கி (1843) ஆகிய வங்கிகளை தனித்தனி பிரிவுகளாக ஏற்படுத்தி இதைத் தனி அதிகாரம் கொண்ட வங்கியாக அறிவித்தது. இந்த மூன்று வங்கிகளும் 1920ல் கலைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி என்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் தனியார் பங்குதாரர்கள் வங்கியாகவும் மற்றும் ஐரோப்பியர்களை அதிக பங்குதாரர்களாக் கொண்டு தொடங்கப்பட்டது.

இந்தியர்களால் முதன் முறையாக 1865 ஆம் ஆண்டு அலஹாபாத் வங்கி தொடங்கப்பட்டது  பின்  பஞ்சாப் நேஷனல் லிமிடெட் 1894ல் லாகூரை தலைமையிடமாக் கொண்டு தொடங்கப்பட்டது. 1906 முதல் 1913 வரையிலான  இடைப்பட்ட காலத்தில் பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் மைசூர் ஆகியவை தொடங்கப்பட்டது. பாரத ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முதல் கட்டத்தில், வங்கியின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவும் மற்றும் 1913 வரை அவ்வப்போது தோல்விகளையும் அடைய நேரிட்டது. தோராயமாக 1100 வங்கிகள் பெரும்பான்மையான சிறிய வங்கிகள் இருந்தன. வணிக வங்கிகளின் செயல்பாடுகள் ஒழுங்கு நிலைப் படுத்த, இந்தய அரசு மூலம் வங்கி நிறுவனங்கள் விதி 1949 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின் வங்கி ஒழுங்கு முறை விதி 1949, நடைமுறைப்படுத்தப்பட்ட விதி 1965 (விதி எண்.  23, 1965) என்று மாற்றப்பட்டது. பாரத ரிசர்வ் வங்கி பின் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட வங்கியாகவும், இந்தியாவின் வங்கித் துறையை கண்காணிக்கும் ஒரு மத்திய வங்கி ஆணையமாகவும் செயல்படுகிறது.

அந்தக்கால கட்டங்களில் வங்கிகள் பொது மக்கள் மத்தியில் குறைந்த நம்பிக்கையையே பெற்றிருந்தது. அதே போல் மிகக் குறைவாகவே இருந்தது. தபால் துறையில் சேமிப்பதே பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது. மேலும் நிதி வியாபாரிகளுக்கே அதிகமாக வழங்கப்பட்டது.



 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016