வங்கி மற்றும் கடன் ::இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி)
நிதியில்லா உதவிகள் உத்திரவாதம் மூலம் இந்திய வணிக வங்கிகளின் முன்னிலையில் கூட்டோடு ஏற்றுமதியாளர்கள் / ஒப்பந்தக்காரர்கள் வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் பணிபுரிவோர் மற்றும் வங்கிகள் மூலம் செய்யப்படுகின்றன. இம்மாதிரியான உத்திரவாதங்கள் அனைத்தும் ஏலம் வைத்து எடுக்கப்பட்ட பத்திரம், முன்பணம் செலுத்திய படிவங்கள், செயல்திறனுக்கான உத்திரவாதம், பண உத்திரவாதம் மற்றும் வெளிநாட்டிற்கு நிதித் தேவைக்கு உயர்த்துவதற்கு உத்திரவாதம் ஆகியவை.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி (SME)
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியத்துவம் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றமை அதன் பங்களிப்பு, சமூகப் பொருளாதார குறிக்கோள்களான வேலை வாய்ப்பு உருவாக்குதல், தேசிய அளவில் அதன் பங்களிப்பு, ஏற்றுமதி, புதிய சுய தொழில் முனைவதற்கு உந்துதல் அளித்தல் மற்றும் பொருளாதாரத்திற்கு தொழிற்சாலைகள் அடித்தளம் ஏற்படுத்துதல் போன்றவை.

இந்தியாவில் திறன் மிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைகள் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சியடையும் வர்த்தகம், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் புதிய சுயதொழில் முனைவோர் ஆகியவை மூலம் செயல்படுகின்றது.

இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வர்த்தக ஆலோசனை சேவைகள், சர்வதேச போட்டிகள் மற்றும் அதிகப் போட்டிகள் நிறைந்த உலகத்தில் ஊக்குவிப்பு தேவைப்படுகின்றது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெயர் பெற்ற தேசிய மற்றும் சர்வதேச ஆலோசர்களின் சேவைகளுக்கான செலவுகள் பயனற்றதாகவும் அவர்களின் தேவையான நோக்கம் நிறைவேறாமலும் செல்கிறது.

இந்த அறிவு வெற்றிடத்தை அறிந்து கொண்டு, இந்திய எக்சிம் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்துத் தேவைகளையும் வழங்கி வருகிறது.

இதில் வர்த்தக வழிகாட்டுதல், ஏற்றுமதி ஒப்பந்தம் வெற்றியடையும் தருவாயில் வைத்திருத்தல் மற்றும் வெற்றியடையும் ஏற்றுமதி வர்த்தகத்திற்குக் கட்டணம் பெறுதல், நாடுகள் / துறைகளின் தகவல் வெளியீடுகள், முக்கியப் பகுதிகள் கொண்ட தகுதி அமைப்புக்களான தரம், பாதுகாப்பு, ஏற்றுமதி சந்தைப்படுத்துதல் மற்றும் நிதி ஆலோசனை சேவைகளான கூட்டுக் கடன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

விவசாய நிதி
தாராளமயமாக்கல் மற்றும் உலக வர்த்தக அமைப்பு பிந்தைய விவரங்கள் ஆகியவை இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. எக்சிம் வங்கி விவசாய வர்த்தக குழுவை வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியது.நிதி உதவிகள் தவனைக் கடன், ஏற்றுமதிக்கு முந்தைய / பிந்தைய கடன், வெளிநாட்டில் வாங்குவோர்க்குக் கடன், மொத்த இறக்குமதி நிதி, உத்திரவாதம் ஆகியவற்றிற்கு வழங்கப்படும். தவனை கடன்கள் பல்வேறு செயல்களான செயலக வசதிகள், விரிவாக்கம் செய்தல், நவீனமயமாக்கல், இயந்திரம் வாங்குதல், உபகரணம் / தொழில்நுட்ப இறக்குமதி, வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுக்கு நிதியளித்தல் மற்றும் அதை விலைக்கு வாங்குதல் போன்றவை.

இவ்வங்கி (மற்ற பங்குதாரர்களுடன்) வேளாண் துறையில் இணைப்பு வைத்திருக்கிறது. வேளாண் துறைகளான உணவு மற்றும் பதப்படுத்துதல்  அமைச்சகம், இந்திய அரசு, நபார்டு, அபீடா, சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக குழுமம் (எஸ்.எப்.ஏ.சி), தேசிய தோட்டக்கலை வாரியம் ஆகியவை. நிதி உதவி இல்லாமல் வங்கி விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை சேவைகளையும் செய்து வருகிறது.வங்கியும் அவ்வப்போது நிறைய கட்டுரைகள், ஏற்றுமதி வளம் பற்றிய பல்வேறு விவசாய சிறு துறைகள் அடங்கிய கட்டுரைகள், இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியீடுகளை பல்வேறு மொழிகளில் உலக அளவில் வாய்ப்புக்களை (வேளாண் வர்த்தகத்தைப் பற்றி) தெரிவிக்கிறது.

ஆதாரம்
http://www.eximbankindia.com
www.eximbankagro.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016