வங்கி மற்றும் கடன் ::இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி)
சர்வதேச சந்தையில் ஈடுபட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்களுக்கு கடன்கள்

  1. ஏற்றுமதியாளர்களுக்கு நேரடிக்கடன் உதவிகள் நடுத்தர தவணைக் கடன் மூலம் வெளிநாட்டு சந்தையில் வாங்குவோர்க்கு கடன் வழங்க உதவி செய்யப்படுகிறது.
  2. சர்வதேச முதலீட்டு நிதியை இந்திய ஊக்குவிப்பாளர்களுக்கு கூட்டு முறையில் நிதி சமமான பங்கீடுகள், இயந்திரம் மற்றும் தளம் ஆகியவற்றை ஏற்றுமதி அல்லது பணம் செலுத்துதல் மூலம்  பெறலாம்.
  3. தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகள் சேவைகள்.
  4. முதலீட்டுப் பொருட்களுக்கு ஏற்றுமதி ஒப்பந்தங்களை கப்பலில் ஏற்றுவதற்கு முன்பாகவே கடன் அளிப்பதற்கு நிதி உதவி அளித்தல்.

வெளிநாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடனுதவி அளித்தல்.

    1. வெளிநாட்டில் வாங்குவோர், வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு இந்திய முதலீட்டுப் பொருட்கள் மற்றும் அதன் சார்ந்த சேவைகளை வாங்க கடன்கள் நேரடியாக வழங்கப்படும்.
    2. இந்திய முதலீட்டுப் பொருட்கள் மற்றும் அதன் சார்ந்த சேவைகள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு அரசுகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.
    3. இந்திய முதலீட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தவணை நிதியை வங்கிகளுக்கு மீண்டும் வழங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இந்திய வணிக வங்கிகளுக்கு கடனுதவி

  1. ஏற்றுமதி கட்டண திரும்பக் குறைக்கும் வசதி
  2. ஏற்றுமதி கடனுக்கு மறுநிதியளிப்பு
ஆதாரம்
http://www.eximbankindia.com
www.eximbankagro.com
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016