|  மாடுகளின் (கால்நடைகளின்) நீக்கம்
 மந்தைகளில்  உள்ள கால்நடைகளில் குறைந்த உற்பத்தி கொண்ட மாடுகள் இனவிருத்தி பாதிக்கப்பட்ட மாடுகள்  மிகவும் மெலிந்து சரியாக வளராத மாடுகள் குணப்படுத்த முடியாத நோய் பாதிக்கப்பட்ட மாடுகள்  மிகக் கடுமையான நோய்களான டியூபர்குளோசிஸ், ஜோகன்ஸ் நோய், ஃபுரூசெல்லோசிஸ், மடியை  இழந்த (அ) பாதித்த மாடுகள், மடி வீங்கி பால் குறைந்துள்ள மாடுகள் போன்ற பொருளாதார  அளவில் இலாபத்தைக் குறைக்கக் கூடிய சேதம் ஏற்படுத்தக் கூடிய கால்நடைகளை மற்தையை விட்டு  வெளியேற்றுவதே கால்நடை நீக்கம் ஆகும். சில இளம் மாடுகளிலேயே விரும்பத்தகாத பண்புகள்  காணப்படும். தூய கலப்பற்ற இனங்களில் உருவாகும் கால்நடைகளில் சில இனவிருத்தி செய்ய முடியாத  மெலிந்த கொம்புகளுடன், மடி பாதிப்படைந்து அல்லது மடி சரியான வளர்ச்சியின்றி காணப்படுகின்றன.  இவ்வாறு வளர்ச்சி குன்றியோ உறுப்புகளில் காயங்களுடனோ உறுப்புகளை இழந்தோ, சரிசெய்ய  முடியாத காயங்களுடனும் இருக்கும். இதற்கு மாடுகளை மந்தையிலிருந்து பிரித்து விடுதல்  நலம். அப்போதுதான் மற்ற கால் நடைகளைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும். அவ்வாறு பிரித்த  மாடுகளைப் பற்றிய தகவல்களை கையேட்டில் பதித்து அவந்நை முநையாகப் பராமரிக்க வேண்டும்.  இவை நீக்கிய கால்நடைப் பதிவேடு எனப்படும்.
 
 கறவை  மாடுகள குறைந்த பால் உற்பத்திக்காக நீக்கும்போது முதல் இரு கறவைப் பருவங்களில் அதன்  பால் உற்பத்திளைக் கவனிக்க வேண்டும். பால் உற்பத்தி அப்போது எதிர்பார்த்த அளவை விடக்  குறைவாக இருந்தால் கறவையை நீக்கி விடலாம். மிகவும் வயதான மாடுகளைப் பராமரிப்பது பொருளாதார  ரீதியில் பலனளிக்கிகாது. எனவே அவற்றை நீக்கி விடுதல் நன்று.
  நீக்கப்பட்ட கால்நடைகள்
 காளைக்கன்றுகள்  கலப்பிற்கு மட்டுமே தேவைப்படும். அதிகளவு எண்ணிக்கையில் தேவைப்பட்டதால் தேவையான வற்றைத்  தவிர மற்றவையை விற்றுவிடலாம். கண் தெரியாமல், கண்ணில் கோளாறுடன் பிறக்கும் கன்றுகளையும்  மிகக்குறைவான எடையுடன் பிறக்கும் கன்றுகளையும் நீக்கவேண்டும். இவ்வாறு வருடம் ஒரு முறையேனும்  கால்நடைகளை தரம்பிரித்து நீக்குதல் வேண்டும்.
 
 (ஆதாரம்:  http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf)
 
 கால்நடை நீக்கத்திற்கு 10 வழிமுறைகள்:
 
            
              குறையற்ற கால்நடைகளை எக்காரணம் கொண்டும்  வெளியேற்றுதல் கூடாதுமுதலில் குறையை நிவர்த்தி செய்ய முடியுமா  என ஆராய வேண்டும். முடியுமெனில் தகுந்த முறையில் குறையைச் சரி செய்து பின்பு மந்தையில்  சேர்த்துக் கொள்ளலாம்மந்தையிலிருந்து வெளியேற்றும் வரை கால்நடைகளுக்கு  தகுந்த உணவு அளிக்க வேண்டும். இல்லை யெனில் அவை சக்தியிழந்து சோர்வடைந்துவிடும்கறவைகளை வெளியேற்றம் முன்பு அதில் உள்ள  பாலை முற்றிலும் கறந்து கொள்ள வேண்டும்கால்நடைகளைக் கொண்டுசெல்ல நன்கு அறிந்த  கால்நடைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருக்கும் முகவரிகளை அணுக வேண்டும்சரியான பாதுகாப்போடு முறையாகக் கொண்டுசென்று  சேர்க்கும் முகவரிகளிடம் மட்டுமே கால்நடைகளை அனுப்ப வேண்டும். சரியான நேரத்தில் கொண்டு  சேர்ப்பார்களாவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்மிக மோசமான நிலையில் உள்ள மாடுகளை பரிமாற்றம்  செய்வதைத் தவிர்த்தல் நலம்நிற்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்குத்  தகுந்த சிகிச்சையளித்து முறையான நடவடிக்கையுடன் அனுப்புதல் நலம்காயம் ஆறாத, எலும்பு, முடடிகளில் காயம்  உள்ள கால்நடைகளை நேரடியாக செயலகத்திற்கே அனுப்பிவிடுதல் நலம்  கால்நடைகளை வெட்டி பதனிடுவதற்குத் தகுதியற்றதாக  இருந்தால் அதை பதனிடும்தொழிற்சாலைக்கு அனுப்புதல் வீண் நல்ல கால்நடை மருத்துவரிடம்  சோதித்த பின்பு அனுப்புதல் நலம் ஆகும்.
 (ஆதாரம்: http://www.agmkt.state.ny.us/ai/Top_10_Considerations_Electronic_Version.pdf) |