Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::சோயாமொச்சை

Iron

இரும்புச்சத்து குறைபாடு

கோவை, ஈரோடு, நீலகிரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இக்குறைபாடு காணப்படுகிறது.

மணற்பாங்கான நிலம், சுண்ணாம்பு அதிகம் கலந்துள்ள மண் வகைகளில் இரும்புச்சத்து பற்றாக்குறை தோன்றுகிறது. அதிக மணிச்சத்து, தழைச்சத்து, தொழுவுரம் இடுவதாலும் இக்குறைபாடு தோன்றும்

குறைபாட்டின் அறிகுறிகள்

துளிர் இலைகளின் இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பாகம் மஞ்சள் நிறமாக மாறும். அதிக பற்றாக்குறையினால் நாளடைவில் இலைகள் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் வெளிர் நிறமாக மாறி விடும்.

குறைபாட்டைக் களையும் முறை

ஒரு சதம் (10 கிராம்/லிட்டர்) அன்னபேதிக் கரைசலை (பொரஸ் சல்பேட் பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை இலைகள் மேல் தெளிக்க வேண்டும் அல்லது எக்டருக்கு 25 கிலோ அன்னபேதி உப்பை அடியுரமாக மண்ணில் இட வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam