Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

தீவன சோளம்

 

தீவனப் பயிர்கள்

தீவன சோளம் (இறவை)
பயிர் மேம்பாடு
மாவட்டங்கள் இரகங்கள்
அ. இறவை                                       
ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஏப்ரல் – மே அனைத்து மாவட்டங்கள்
கோ எஃப் , எஸ் – 29 & கோ 31 (மறுதாம்பு சோளம்)
ஆ. மானாவாரி                                
ஜுன் – ஜுலை
அனைத்து மாவட்டங்கள்
செப்டம்பர் – அக்டோபர்
அனைத்து மாவட்டங்கள்

சிறப்பியல்புகள்

விவரங்கள் கோ (எப்.எஸ்) 29 கோ (எப்.எஸ்) 31
பெற்றோர்
டி.என்.எஸ் 30 x சொர்கம் சுடானேன்ஸில் இருந்து பெறப்பட்டது.

Gamma ray (400 Gy) mutant of CO (FS) 29

வயது (நாட்கள்) மறுதாம்பு வகை
(3 years)
மறுதாம்பு வகை
(3 years)
சராசரி பசிந்தீவன மகசூல் (டன்/எக்டர்) 160-170 (6-7 மறுதாம்புகள்) 190-(6-7மறுதாம்புகள்)
தோற்ற இயல்புகள்
தண்டின் உயரம் (செ.மீ) 220-250 270 - 290
தூர்களின் எண்ணிக்கை 10-15 12-17
இலைகளின் எண்ணிக்கை 80-105 90-110
இலை நீளம் (செ.மீ) 75-90 85 - 95
இலை அகலம் (செ.மீ) 3.5-4.6 4.5 - 5.0
இலை தண்டு வீதம் 0.2-0.25 0.26
தர இயல்புகள்
புரதச்சத்து (%) 8.41 9.86
உலர் பொருள் (%) 23.60 25.9
நார் சத்து (%) 25.60 19.80
ஐ.வி.டி.எம்.டி (%) 50.30 52

குறிப்பு : தீவனச் சோளத்துடன் கோ – 5 மற்றும் கோ – எஃப் சி 8 இரக தட்டைப்பயறை சேர்த்து ஊடு பயிராக பயிர் செய்தால் சத்தான தீவனத்தைப் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள் : தீவனச்சோளம் கோ 31

பருவம் : ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிர் செய்யலாம். ஒரு முறை விதைத்து பல முறை அறுவடை செய்யலாம்.
நிலம் : நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல் : 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவும். உழுவதற்கு முன் எக்டருக்கு 25 டன் தொழுவுரம் இடவும்.
விதை அளவு   5 கிலோ / எக்டர்
இடைவெளி : 30 x 15 செ.மீ.(விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும்)
60 x 15 செ.மீ.(விதை உற்பத்தி செய்வதற்கு)
உரம்(எக்டருக்கு) : அடியுரம்
45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
மேலுரம்
விதைத்த 30 வது நாட்களில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வொரு ஆண்டு முடிவுக்குப்பின்  45:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து
இடவும்.
களை நிர்வாகம் : முதல் களை விதைத்த 25-30 நாட்களில் எடுக்கவும். பிறகு தேவைப்படும் போது ஒவ்வொரு அறுவடைக்குப்பின்பும் ஒரு முறை களை எடுத்து உரமிடவும்.
நீர்ப்பாசனம் : விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுத்த பிறகு 7-10 நாட்களுக்கொருமுறை மண் வகை மற்றும் மழை அளவைப்பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப்பாதுகாப்பு : பொதுவாகத் தேவையில்லை
பசுந்தீவன அறுவடை : 50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடை விதைத்த 65 -70 நாட்களிலும் அடுத்த அறுவடைகள் 50 நாட்களுக்கொருமுறை
விதை அறுவடை : விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம்.
பசுந்தீவன மகசூல் : 192 டன்கள் / எக்டர்/ ஆண்டு (6-7 அறுவடைகளில்)
விதை மகசூல்   1000 கிலோ / எக்டர்/ ஆண்டு. ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45-60 நாட்கள். அதனால் அறுவடைக்குப் பிறகு 60 நாட்கள் கழித்து விதைக்க வேண்டும்


 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram