Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை :: அங்கக நிலப்போர்வை

நன்மைகள்:

  • தழைக்கூழம் மண்ணில் ஊட்டச்சத்து மற்றும் நீர் தங்கும் திறனை அதிகரிக்கிறது.
  • சாதகமான மண் நுண்ணுயிர் செயல்பாடு மற்றும் புழுக்கள் ஊக்குவிக்கிறது.
  • களை வளர்ச்சி ஒடுக்குகிறது.
  • ஆவியாதல் குறைக்கிறது.
  • தழைக்கூழம் ஈரம் தக்க வைக்க, மண் அரிப்பை தடுக்க, களைகள் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் ஊட்டச் சத்துக்களை சேர்க்கிறது.

அங்கக தழைக்கூழத்தின் நன்மைகள் :

தழைக்கூளம் நிறைய சூரிய ஒளிக்கதிர்களை பிரதிபலிக்கிறது இல்லையெனில் மண்ணின் வெப்பம் அதிகரிக்கிறது.  இந்த மண்ணைக் குளிரூட்டி மற்றும் ஆவியாதல் தடுக்க உதவுகிறது. இந்த வெப்பம், வறண்ட தட்ப பகுதிகளில் முக்கியமாக உள்ளது. மண்ணில் தழைக்கூளம் மூடப்பட்டிருக்கும் போது களைகள் வளராது ஏனெனில் களைகள் வளர சூரிய ஒளி தேவை.  

தழைக்கூழம், மண் அரிப்பு தடுக்க காற்று அல்லது ஓடும் தண்ணீர் நேரடியாக மண்ணோடு தொடர்பு இல்லாததால் அவைகள் அடித்து செல்லப்படுவதில்லை. மண்ணில் பரவி இருக்கும் தழைக்கூழம் மழை நீரின் ஓடும் வேகத்தைக் குறைத்து மண்ணின் நனைக்கும் தன்மை அதிகரிக்கும். மண்ணில் அதிக தண்ணீர் உள்ளபோது பயிருக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். அங்கக தழைக்கூழம் மண்ணின் நிலையை மேம்படுத்துகிறது.

இந்த தழைக்கூழங்கள் மெதுவாக மட்கி மண்ணில் அங்ககப்பொருட்களை இட்டு மண்ணைத் தளர்த்துகிறது. இந்த உயிர்ம மண்ணில் உள்ள மண்புழுக்கள் மற்றும் பிற மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் உணவு ஆகிறது மற்றும் ஒரு நல்ல நுண்ணிய மண் உருவாக்க பயணப்படுகிறது. இதனால் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது நீர் ஊடுருவல் அதிகரிக்கிறது, மற்றும் மண்ணின் நீர் வைத்திருக்கும் திறன் அதிகரிக்கிறது. உயிர்ம சிதைந்து கொண்டு மேலும் ஊட்டச் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கிறது. மண் வெப்பநிலையை பராமரிக்கிறது. சுத்தமாக வைத்திருக்கிறது, ஈரமான போதும் நிலத்திற்குள் செல்ல முடிகிறது.

 

 
Fodder Cholam