Agriculture
சாதகமற்ற சூழ்நிலை :: வறட்சி

வறட்சி மேலாண்மை

1. ஊட்டச்சத்து மேலாண்மை

  • வறட்சி ஏற்படும் போது, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இது மட்டுமல்லாமல் கரும்பு, துத்தநாகம் மற்றும் போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறையும் ஏற்படும். எனவே கீழ்க்கண்ட சத்துக்களை பயிர்களுக்க இணங்க, குறைபாட்டிற்கு ஏற்ப தெளிக்கவேண்டும்.
  • 20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட்
  • 0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு
  • 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட்
  • 0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் + 1 சதவீதம் யூரியா
  • 0.3 சதவீதம் போரிக் அமிலம்

ஆன்டிடிரான்ஸ்பிரன்ட்ஸ்

  • பயிர்களின் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஆன்டிடிரான்ஸ்பரஸ் என்ற பெயர்.

இலைத்துளைகளை மூடுதல்

  • 2,4 டி , பாஸ்பான் – டி, அட்ரசின்
  • பினைல் மெர்க்குரி அசிட்டேட்
  • ஹைட்ராக்ஸ் சல்போனேட்ஸ், பொட்டாசியம் மெட்டா  பை சல்பேட்
  • அப்சிலிக் அமிலம், எத்ரல், டிபா, சக்சினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், சைக்கோசெல்.

பிரதிபலிக்கும் தன்மையுள்ளவை

  • கயோலின்
  • சீனா களிமண்
  • கால்சியம் பை கார்பனேட்
  • சுண்ணாம்பு நீர்
  • ஆல்கஹால் (ஹெக்சாடிகேனால், செட்டைல் ஆல்கஹால், மெத்தனால்)
  • பேக்குலோபியூட்ரசால்
  • பிராசினோலைடு
  • ரிசார்சினால்

பாலித்தீன் பொருட்கள்

  • மொபிலீஃப்
  • ஃபோரிகாட்
  • மெருகு
  • எஸ் - 800
  • ஹிகோ - 110 ஆர்

பயிர்களில் ஏற்படும் நன்மைகள்

  • போதுமான அளவு மழை பெய்யாத போது பயிர்களில் மகசூலை அதிகரிக்க இந்த முறை உதவுகிறது.
  • கடுமையான வறட்சி நிலவும் போது, ஒரு நிலையான மகசூலை எடுக்க வழிவகை செய்கிறது.
  • தானியங்களின் அளவு பாதிக்கப்படுவதில்லை.
  • விதைகளின் தரம் உயர்த்தப்படுகிறது.
  • நீரைப் பயன்படுத்தும் திறன் குறைக்கப்பட்டு, நீர்ன் அளவு சேமிக்கப்படுகிறது.
  • குறைந்த முதலீட்டில் பயிரின் சேதம தவிர்க்கப்படுகிறது.
  • வறட்சியை சமன் செய்ய முடியும்.
  • குறைந்த அளவு நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்க மிகவும் பயனளிக்கிறது.
  • கோடைக் காலங்களில் நாற்றாங்கால் பயிரை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.

வளர்ச்சி ஊக்கிகளில் பயன்பாடு

  • வறட்சிக் காலங்களில் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை நிலைநிறுத்த வளர்ச்சி ஊக்கிகள் பெரிதும் உதவுகின்றன.

சைக்கோசெல் மற்றும்  மெபிகுவாட் குளோரைடு

  • வேரின் வளர்ச்சியைத் தூண்டவும், நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகவும் உதவுகிறது.

சைட்டோகைனின் மற்றம் சாலிசிலிக் அமிலம்

  • இலைகள் முதிர்ச்சியடையும் முன்னரே உதிர்வதைத் தடுக்கிறது. வறட்சிக் காலங்களில் தண்டில் சேமித்து வைக்கப்படும். உணவுப் பொருட்கள் பயிரின் வளர்ச்சிக்காகவம் பயன்படுத்தப்படுகிறது.

பிராசினோலைடுகள்

  • பயிர்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கிறது.

அஸ்கார்பிக் அமிலம்

  • வறட்சிக் காலங்களில், செல் சவ்வுகளின் பாதிப்பைத்த தடுப்பதற்கு அஸ்கார்பிக் அமிலம் உதவுகிறது.

விதைகள் / தாவரங்களை கடினப்படுத்த

  • 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு
  • 1 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்
  • 100 பிபிஎம் சக்சினிக் அமிலம்
  • 0.5 சதவிகிதம் சோடியம்  குளோரைடு
  • 100 பிபிஎம் சக்சினிக் அமிலம்
  • 100 பிபிஎம் மாங்கனீசு சல்பேட்
  • 100 பிபிஎம் அஸ்கார்பிக் அமிலம்
  • 250 பிபிஎம் சைக்கோசெல்
  • 0.5 சதவிகிதம் மெக்னீசியம் சல்பேட்

மேலும் சில வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள்

  • 2 சதவிகிதம் டீஏபி மற்றும் 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூக்கும் பருவம் மற்றும் தானியங்கள் உருவாகும்  பருவத்தில் தெளித்தல்.
  • 3 சதவிகிதம் கயோரின் கரைசலை வறட்சி காலங்களில் குறித்த பருவத்தில் தெளிக்கவேண்டும்.
  • 500 பிபிஎம் சைக்செல்லை இலைவழியாகத் தெளித்தல்
  • கரும்பு / சோளத்தின் சோகையை நிலப்போர்வையாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் நிலைநிறுத்தப்படுகிறது.
  • பருத்தியில் நைட்ரஜன் உரங்களை பிரித்து விதைத்த 45 மற்றும் 60 நாட்கள் கழித்து இடுதல்
  • உயிர் உரங்களைப் பயன்படுத்துதல்
  • விதைகளை கடினப்படுத்துதல்
  • என்ஏஏ 40 பிபிஎம் ( 4 மில்லி பிளானோபின்ஸ் / 4.5 லிட்டர் தண்ணீர்)
  • பருத்தியில் 15, 20வது கணுப்பகுதிக்கு மேலே உள்ள பகுதியை கிள்ளிவிடுவதன் மூலம் நீராவிப்போக்கைத் தவிர்க்கலாம்.
  • 0.5 சதவிகிதம் துத்தநாக சல்பேட் + 0.3 சதவிகிதம் போரிக் அமிலம் + 0.5 சதவிகிதம் இரும்பு சல்பேட் + 1 சதவிகிதம் யூரியா போன்ற கரைசலை வறட்சிக் காலங்களில் பயன்
  • படுத்துதல்.
 
Fodder Cholam