ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி       நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம் 
 
                நாற்றங்காலின் பரப்பு,       விதை அளவு மற்றும் விதை நேர்த்தி சேற்று நாற்றங்காலுக்குக்       குறிப்பிடப்பட்டவை போன்றதே
 
                நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ       அகலமுள்ள பாத்திகளாக அமைத்தல் வேண்டும். பாத்தியினைச் சுற்றிலும் ஒரு அடி       அகலமுள்ள வாய்க்கால் அமைப்பது நல்லது 
 
                களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுபாத்திகள்       அமைக்கலாம், மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப்       பாத்திகள் போதுமானது.
 
                நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைக் தூவப்பட்டு, நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு       உரத்தினால் விதைகள் மூடப்பட வேண்டும்
 
                நீர் நிர்வாகம் மண்நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும்
 
                நான்கு இலைப் பருவம் நடவிற்கு ஏற்றது.